For Daily Alerts
Just In
அரபிக் கடலில் மையம் கொண்டுள்ள புதிய புயல் “நிலோபர்” – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
அகமதாபாத்: அரபிக் கடலில் மீண்டும் "நிலோபர்" என்று பெயரிடப்பட்டுள்ள புதிய புயல் ஒன்று உருவாகி உள்ளது.
அரபிக் கடலின் மத்திய மேற்கு பகுதியிலும், அதையொட்டிய தென்மேற்கு பகுதியிலும் நிலை கொண்டுள்ள இந்த புயல் அடுத்த 48 மணி நேரத்தில் வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு குஜராத் கடலோர பகுதியை நோக்கி செல்லும் என்று அகமதாபாத் வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்து உள்ளது.
இதனால் குஜராத் மாநிலத்தின் கடலோர மாவட்டங்களில் இப்போதே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. புயல் சின்னம் குறித்த முன்னறிவிப்புகளும், தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும், வெள்ள பாதிப்பு ஏற்படும் வகையிலான பகுதியைச் சேர்ந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர்.
Comments
English summary
The coastal districts of Gujarat would receive isolated heavy to very heavy rainfall as cyclone Nilofer would intensify further into a severe cyclonic storm during the next 24 hours, India Meteorological Department (IMD) said on Sunday.
Story first published: Monday, October 27, 2014, 8:31 [IST]