'சங்கராபரணம்' கே. விஸ்வநாத்துக்கு தாதா சாகிப் பால்கே விருது !
பிரபல இயக்குனரும், நடிகருமான காசிநாதுனி விஸ்வநாத்துக்கு தாதா சாகிப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி: சங்கராபரணம், சிப்பிக்குள் முத்து உள்ளிட்ட படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் காசிநாதுனி விஸ்வநாத்துக்கு தாதா சாகிப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திராவைச் சேர்ந்த நடிகரும், இயக்குனரும் ஆவார் கே.விஸ்வநாத். இவர் தெலுங்கு திரைப்படத்துறையில் எண்ணற்ற படங்களில் இயக்கியும் நடித்தும் உள்ளார். அத்துடன் தமிழ், இந்தி, மலையாளம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
சங்கராபரணம், சிப்பிக்குள் முத்து உள்ளிட்ட படங்களையும் இயக்கியுள்ளார் கே.விஸ்வநாத், தமிழில் உத்தமவில்லன், யாரடி நீ மோகினி உள்ளிட்ட திரைப் படங்களிலும் நடித்துள்ளார்.
இவர் இயக்கிய சங்கராபரணம் படத்திற்காக 1980 ஆம் ஆண்டு மத்திய அரசு தேசிய விருது வழங்கி கவுரவித்தது. கே.விஸ்வநாதனுக்கு 1992 ஆம் ஆண்டு மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டது. திரைத்துறையில் சிறப்பாக பணியாற்றியதற்காக பத்மஸ்ரீ விருது, நந்தி விருது, பிலிம்பேர் விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார். இந்நிலையில் 2016 ஆம் ஆண்டு தாத சாகிப் பால்கே விருது காசிநாதுனி விஸ்வநாத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.