ஐ.டி சிட்டி டூ டெம்பிள் சிட்டி.. பெங்களூர்-மதுரைக்கு விமான சேவை அறிமுகம்!
பெங்களூர்: பெங்களூரில் இருந்து மதுரைக்கு குறைந்த கட்டணத்தில் விமான சேவையை அறிமுகம் செய்ய உள்ளது ஏர் பெகசஸ். வரும் 26ம் தேதி முதல் இச்சேவை தொடங்க உள்ளது.
இது குறித்து ஏர் பெகசஸ் விமான நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
ஜூன் 20ம் தேதி பெங்களூருவிலிருந்து மதுரைக்கு முதல் விமான சேவை தொடங்கப்படும். வாரத்தில் திங்கள், வெள்ளி, சனிக்கிழமை ஆகிய 3 நாட்கள் பெங்களூரு-மதுரை இடையே விமானங்கள் இயக்கப்படும்.
விமான சேவை உள்ள நாட்களில் பெங்களூருவில் காலை 10.40 மணிக்கு புறப்பட்டு, 11.30 மணிக்கு மதுரையை சென்றடையும். 11.50 மணியளவில் மதுரையிலிருந்து புறப்படும் விமானம் பிற்பகல் 12.35 மணியளவில் பெங்களூருவைச் சென்றடையும்.
இதற்கான அறிமுக கட்டணம் ரூ. 1234 ஆகும். திங்கள்கிழமை (இன்று) முதல் விமான பயணத்திற்கான முன்பதிவு செய்யப்படும். விரைவில் கர்நாடகம், தமிழகம், கேரளா, புதுச்சேரி, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் உள்ள இரண்டாம் நிலை நகரங்களுக்கு விமான சேவை வழங்குவது என முடிவு செய்துள்ளோம்.
முதல் நிலை நகரங்கள் மட்டுமின்றி இரண்டாம நிலை நகரங்களுக்கு விமான சேவையை குறைந்த கட்டணத்தில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம் அனைவரும் பரவலாக விமானத்தில் பயணம் செய்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தந்துள்ளோம். இதன் மூலம் குறைந்த நேரத்தில் நீண்ட பயணங்கள் செல்வது சாத்தியமாகியுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.