குஜராத்தில் பசுகாவலர்களால் தாக்கப்பட்ட குடும்பம் உட்பட 300 தலித்துகள் புத்த மதம் மாறினர்
குஜராத்தில் 300 தலித்துகள் புத்த மதம் மாறினர்.
Recommended Video
உனா: குஜராத் உனாவில் இந்துத்துவா அமைப்பினரால் கடும் தாக்குதலுக்குள்ளான குடும்பத்தினர் உட்பட 300 தலித்துகள் புத்த மதத்துக்கு மாறினர்.
உனாவில் 2016-ம் ஆண்டு இறந்த பசுவின் தோலை உரித்தனர் எனக் கூறி 4 பேர் மிகக் கடுமையாக தாக்கப்பட்டனர். இது தொடர்பான வீடியோ வெளியாகி நாட்டையே அதிர்ச்சியில் உறைய வைத்தது.
இதேபோல் நாட்டின் பல பகுதிகளில் பசு பாதுகாவலர்கள் எனக் கூறிக் கொண்டு வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டனர். குஜராத் சட்டசபை தேர்தலிலும் இது எதிரொலித்தது.
அத்தேர்தலில் தலித்துகளின் பிரதிநிதியாக ஜிக்னேஷ் மேவானி சுயேட்சையாக போட்டியிட்டும் வென்றார். இந்த நிலையில் உனாவில் தாக்கப்பட்ட குடும்பத்தினர் உட்பட 300 தலித்துகள், பவுத்த மதத்துக்கு மாறினர்.
தலித்துகள் இந்து மதத்தில் ஒடுக்கப்படுவதால் அம்பேத்கர் காலத்தில் இருந்து பவுத்த மதத்துக்கு மாறுவது தொடருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.