நாளை மறுநாள் 60வது பிறந்த நாளை விமரிசையாக கொண்டாடும் தாவூத்! வாரிசை அறிவிக்க திட்டம்
டெல்லி: இந்தியாவால் தேடப்பட்டு வரும் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் வரும் சனிக்கிழமை 60வது பிறந்த நாளை கொண்டாடும்போது, தனது நிழலுலக வாரிசை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பையை கலக்கி வந்த நிழலுலக தாதா தாவூத் தற்போது, பாகிஸ்தான் நாட்டின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பின் பாதுகாப்பில் கராச்சியில் பதுங்கியிருப்பதாக கூறப்படுகிறது.
வரும் சனிக்கிழமை தாவூத் தனது 60வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இந்த விழாவிற்கு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தனது நண்பர்களை, தாவூத் அழைத்து இருப்பதாகவும், ஐக்கிய அரபு நாடுகளில் இருந்து அதிகபட்சமாக 35 பேர் அழைக்கப்பட்டு இருப்பதாகவும், இவர்களில் அரச குடும்பத்தினரும் அடங்குவர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் இருந்து சென்று இந்த விழாவில் யாராவது கலந்து கொள்கிறார்களா என்று போலீசார் கண்காணித்து வருகின்றனர். பிறந்த நாள் விழாவின்போது, நிழலுக அடுத்த வாரிசை தாவூத் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தன்னுடன் நெருக்கமாக வைத்து இருக்கும் சோட்டா ஷகிலை, தாவூர் இப்ராஹிம் தனது வாரிசாக அறிவிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. போதை, ஹவாலா, சூதாட்டம் போன்ற சட்ட விரோத தொழில்கள் மூலம் சுமார் 10 பில்லியன் மதிப்புக்கு நிழலுலகத்தில் தாவூத் நடவடிக்கைகள் இருப்பதாக கூறப்படுகிறது.