நடிகைக்கும் தாவூத் இப்ராகிமுக்கும் பிறந்த மகன் இப்போது பெங்களூரில்!
டெல்லி: நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் பாலிவுட் நடிகை ஒருவரை திருமணம் செய்து அவருக்கு ஒரு மகனும் உள்ளார் என்று முன்னாள் போலீஸ் அதிகாரி நீரஜ் குமார் தெரிவித்துள்ளார்.
முன்னாள் டெல்லி போலீஸ் கமிஷனரும், சிபிஐ துணை தலைவருமான நீரஜ் குமார் 1993ம் ஆண்டு நடந்த மும்பை தொடர் குண்டுவெடிப்புகள் பற்றிய விசாரணை பற்றி டயல் டி ஃபார் டான் என்ற பெயரில் புத்தகம் எழுதியுள்ளார்.
அந்த புத்தகம் வரும் சனிக்கிழமை வெளியிடப்பட உள்ளது. அந்த புத்தகத்தில் குமார் கூறியிருப்பதாவது,
தாவூத் இப்ராஹம் பாலிவுட் நடிகை ஒருவரை ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு பிறந்த மகன் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக வளர்க்கப்பட்டார். தாவூதின் மகனை நடிகையின் சகோதரி வளர்த்துள்ளார்.
தற்போது தாவூதின் மகன் பெங்களூரில் வசித்து வருகிறார். மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தான் குற்றமற்றவன் என்று தாவூத் தெரிவித்தார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீரஜ் குமார் எப்.பி.ஐ. மற்றும் ஸ்காட்லாந்து யார்டுடன் சேர்ந்து பணியாற்றியவர். தற்போது அவர் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஊழல் தடுப்பு மாற்றும் பாதுகாப்பு பிரிவின் தலைமை ஆலோசகராக உள்ளார்.