For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'ஆட்டோவில்' ஏறி பத்திரிகையாளர்களிடம் எஸ்கேப் ஆன தயாநிதிமாறன்

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லி நீதிமன்ற வளாகத்தில் பத்திரிகையாளர்கள் சந்திப்பை தவிர்க்க ஆட்டோவில் ஏறி சென்றார் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன்.

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் முன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தனர் தயாநிதி மாறன், கலாநிதி மாறன், அவரது மனைவி காவேரி கலாநிதி. இந்த மனு மீது டெல்லி பாட்டியாலா சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற்றது.

Dayanidhi Maran take auto to avoid Reporters

இன்றைய விசாரணைக்கு தயாநிதி உள்ளிட்ட 3 பேரும் ஆஜராகி இருந்தனர். இந்த வழக்கின் விசாரணை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

நீதிமன்ற விசாரணைகள் முடிவடைந்த பின்னர் அங்கிருந்த செய்தியாளர்கள் கூட்டத்தைப் பார்த்தார் தயாநிதி மாறன்... செய்தியாளர்களை சந்திப்பதை தவிர்க்க நினைத்த தயாநிதி மாறன் திடீரென ஆட்டோ ஒன்றில் ஏறி சென்றார்.

இதையும் விடாமல் படமெடுத்துத் தள்ளினர் பத்திரிகையாளர்கள்.

English summary
Former Union Minister Dayanidhi Maran today take auto in Delhi court campus to avoid Reporters.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X