வீரர்களை தேர்வு செய்ய பெண்களை படுக்கைக்கு அழைக்கும் டெல்லி கிரிக்கெட் சங்க அதிகாரிகள்: கெஜ்ரிவால்
டெல்லி: டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கம்(டிடிசிஏ) வீரர்களை தேர்வு செய்ய பெண்களை படுக்கைக்கு அழைப்பதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.
டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கம்(டிடிசிஏ) ஊழல் மலிந்த சங்கமாக உள்ளது என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில்,
டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கம்(டிடிசிஏ) வீரர்களை தேர்வு செய்ய பெண்களை படுக்கைக்கு அழைக்கிறார்கள். மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர் என்னிடம் வந்து இது குறித்து தெரிவித்தார். அவரின் மகனை டெல்லி கிரிக்கெட் அணியில் சேர்க்க அவரின் மனைவியை இரவு நேரத்தில் படுக்கைக்கு வருமாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து சாட்சி சொல்ல அந்த பத்திரிக்கையாளர் தயாராக உள்ளார். பாஜக அரசு சிபிஐயை வைத்து என்னை மிரட்டப் பார்க்கிறது. இந்த கெஜ்ரிவால் சிபிஐயை பார்த்து எல்லாம் பயப்பட மாட்டான். டெல்லி கிரிக்கெட் சங்கத்தில் லஞ்ச பிரச்சனையும் உள்ளது என்றார்.