For Daily Alerts
Just In
சமூக சேவகர் டீஸ்டா செதல்வாட் வழங்கி கணக்கு முடக்கம்.. குஜராத் அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்
டெல்லி: சமூக சேவகர் டீஸ்டா செதல்வாட் சேவை அமைப்பின், வங்கி கணக்கை முடக்கி வைத்துள்ளது குறித்து விளக்கம் அளிக்குமாறு குஜராத் மாநில அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சமூக சேவகர் டீஸ்டா செதல்வாட் மற்றும் குஜராத் அரசுக்கு நடுவே நீண்டகாலமாகவே மோதல் போக்கு இருந்து வருகிறது. இந்நிலையில், நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி டீஸ்டா செதல்வாட் நடத்திவரும் என்ஜிஓவுக்கு சொந்தமான வங்கி கணக்கை குஜராத் அரசு கடந்த 2014ம் ஆண்டு முதல் முடக்கி வைத்துள்ளது.
இதை எதிர்த்து, தொடரப்பட்ட வழக்கில் குஜராத் மெட்ரோபொலிட்டன் மற்றும் ஹைகோர்ட் ஆகியவை, டீஸ்டா செதல்வாட் மனுவை டிஸ்மிஸ் செய்தன. உச்சநீதிமன்றத்தில் டீஸ்டா செதல்வாட் மேல்முறையீடு செய்த நிலையில், இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு குஜராத் அரசுக்கு சுப்ரீம் கோர்ட் இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
Comments
English summary
The Supreme Court today issued notice to the Gujarat government on a plea filed by activist Teesta Setalvad challenging a decision in which accounts of her NGO were frozen. The Supreme Court directed the Gujarat government to file its reply while posting the matter to August 21.
Story first published: Wednesday, August 17, 2016, 14:43 [IST]