போர் கப்பல், ஹெலிகாப்டர்கள் பரிமாற்றம்.. இந்தியா-ரஷ்யா நடுவே ஒப்பந்தம் #BRICS2016
பானாஜி: பிரிக்ஸ் மாநாட்டில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ரஷ்யா அதிபர் புடின் முன்னிலையில், இரு நாடுகள் நடுவே 16 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. அமைதியை நிலைநாட்ட இணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளது.
கோவாவில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தங்களில் உள்ள அம்சங்கள்:
ஸ்மார்ட் சிட்டி மற்றும் ஆந்திர போக்குவரத்து, ஆந்திராவில் கப்பல் தயாரிப்பு, ஹரியானாவில் ஸ்மார்ட் சிட்டிகள், இரு நாடுகள் நடுவேயான எரி வாயு குழாய் பதிப்பு குறித்த ஆய்வு, எஸ்சார், ஓன்ஜிசி மற்றும் ரோஸ்நெப்ட் நடுவேயான ஒப்பந்தம், அடிப்படை கட்டமைப்பு நிதியம், ரயில்வே துறை, கமோவ் ஹெலிகாப்டர்கள், இஸ்ரோ ஒப்பந்தம், இரு நாட்டு வணிக ஒப்பந்தம், அறிவியல் வளர்ச்சிக்கான ஒப்பந்தம், பெட்ரோலியம் எனர்ஜி, சர்வதேச தகவல் தொடர்பு பாதுகாப்பு, நான்கு போர்க்கப்பல்கள், கூடங்குளத்தில் கூடுதலாக இரு அணு உலைகள் ஆகியவை இந்த ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ள அம்சங்களாகும்.
இதில் கமோவ் ஹெலிகாப்டர் ஒப்பந்தப்படி, இந்தியாவில் ரஷ்ய தொழில்நுட்பத்திலான அதி நவீன கமோவ் வகை ஹெலிகாப்டர்கள் உற்பத்தி செய்யப்படும். சுமார் 200 ஹெலிகாப்டர்களை உற்பத்தி செய்து விமானப்படைக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.