For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தீபாவளிக் கொண்டாட்டங்கள் ராணுவ வீரர்களுக்கு அர்ப்பணிப்பு.. மான் கி பாத்தில் மோடி பேச்சு

தீபாவளிக் கொண்டாட்டங்கள் அனைத்தையும் ராணுவ வீரர்களுக்கு அர்ப்பணிப்பதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Google Oneindia Tamil News

டெல்லி: மான் கி பாத் என்ற பிரதமர் மோடியின் வானொலி உரையில் தீபாவளிக் கொண்டாட்டங்களை ராணுவ வீரர்களுக்கு அர்ப்பணிப்பதாக கூறியுள்ளார்.

மனதின் குரல் எனப்படும் வானொலி நிகழ்ச்சியான மான் கி பாத்தில் உரையாற்றிய பிரதமர், தீபாவளி இந்தியாவில் மட்டுமல்லாது உலகெங்கிலும் கொண்டாடப்படும் பண்டிகையாக திகழ்வதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்தியாவில் கொண்டாடப்படும் பெரும்பாலான பண்டிகைகள் இயற்கை நிகழ்வுகளையொட்டியே அமைந்துள்ளதாகவும், தீபாவளி மக்களை ஒன்றிணைக்கும் பண்டிகையாக திகழ்வதாக கூறினார்.

Dedicate this Diwali to jawans, says Modi

அண்மையில் நடைபெற்ற யூரி தாக்குதலில் 19 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததைக் குறிப்பிட்ட பிரதமர் மோடி, யூரி தாக்குதலுக்கு பொறுப்பானவர்கள் தண்டனையில் இருந்து தப்ப முடியாது என்று கூறினார்.

மக்கள் மகிழ்ச்சியாக தீபாவளி பண்டிகையை கொண்டாடக் காரணம் ராணுவ வீரர்கள்தான் என்றும் அதனால் அவர்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறோம் என்றும் மோடி தெரிவித்தார். மேலும், இந்த தீபாவளி கொண்டாட்டத்தை ராணுவ வீரர்களுக்கு அர்ப்பணிப்பதாகவும் மோடி கூறினார்.

English summary
Prime Minister Modi today addressed the nation through ‘Mann Ki Baat’ on All India Radio.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X