போர் விமானத்தில் பயணித்த நிர்மலா சீதாராமன்.. பாதுகாப்பு சோதனை நடத்தினார்!
பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் போர் விமானத்தில் பறந்து இருக்கிறார்.
Recommended Video
ஜெய்ப்பூர்: பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் போர் விமானத்தில் பறந்து இருக்கிறார். இதற்காக அவர் சுகோய் 30எம்கேஐ விமானத்தை பயன்படுத்தி இருக்கிறார்.
இது இரண்டு பேர் பயணிக்க கூடிய விமானம் ஆகும். இவர் பாதுகாப்பு சோதனைகள் செய்வதற்காக இப்படி பறந்ததாக கூறப்படுகிறது.
இந்தியாவில் இருக்கும் சில முக்கிய நபர்கள் மட்டுமே இப்படி போர் விமானத்தில் பறந்து இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
விமானம்
பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பறந்த போர் விமானம் சுகோய் 30எம்கேஐ விமானம் ஆகும். இது முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்டது. இதில் இரண்டு பேர் அமரலாம். நிர்மலா சீதாராமனும் முதல் நிலை பைலட்டும் இதில் பயணித்தார்கள்.
எந்த இடத்தில் இருந்து
இன்று காலை நிர்மலா சீதாராமன் ராஜஸ்தான் சென்றடைந்தார். அங்கு இருக்கும் ஜோத்பூர் விமான படை விமான நிலையத்தில் அதிகாரிகளுடன் உரையாடினார். பின் அங்கிருந்து சுகோய் போர் விமானத்தில் கிளம்பி இருக்கிறார்.
காரணம் என்ன
நிர்மலா சீதாராமன் சமீப காலமாக பாதுகாப்பு துறையின் மூன்று படைகளிலும் திடீர் சோதனை நடத்தி வருகிறார். ஏற்கனவே கடற்படையில் சோதனை நடத்தினார். ஐஎன்எஸ் விக்ரமாதித்யாவில் பயணித்து அதன் செயல் திறனை சோதனை செய்தார்.
தொடரும்
இது போன்ற சோதனைகள் மேலும் தொடரும் என்று கூறப்பட்டுள்ளது. இந்திய பாதுகாப்பு துறையை வலுப்படுத்த இப்படி செய்யப்படுகிறது. சில நாட்களுக்கு முன் இந்தியா எல்லையான டோக்லாமில் நிர்மலா சீதாராமன் பார்வையிட்டு வீரர்களுடன் உரையாடியது குறிப்பிடத்தக்கது.