For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாக். துண்டு துண்டாக சிதைந்து போவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது: ராஜ்நாத்சிங் வார்னிங்

Google Oneindia Tamil News

பாட்னா: பாகிஸ்தான் எல்லையில் ஊடுருவலைத் தொடர்ந்து கொண்டிருந்தால் அந்த நாடு துண்டு துண்டாக சிதைந்து போவதை உலகின் எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் எச்சரித்துள்ளார்.

பீகார் தலைநகர் பாட்னாவில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ராஜ்நாத்சிங் பேசியதாவது:

Defence Minister Rajnath Singh warns Pakistan

ஜம்மு காஷ்மீரில் அமலில் இருந்த 370வது பிரிவும் 35ஏவும்தான் பயங்கரவாதத்தை ஊக்குவித்து வந்தன. அதனால்தான் ஜம்மு காஷ்மீரில் ரத்த ஆறு ஓடியது.

அந்த சட்டப்பிரிவுகள்தான் பயங்கரவாதிகளை ஊடுருவ செய்வதற்கான தைரியத்தை பாகிஸ்தானுக்கு கொடுத்தது. தற்போது அந்த பிரிவுகள் நீக்கப்பட்டுவிட்டதால் பாகிஸ்தான் அலறுகிறது.

இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைப்பு விவகாரம்...நிலைப்பாட்டை விளக்கிய முத்தரசன்இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைப்பு விவகாரம்...நிலைப்பாட்டை விளக்கிய முத்தரசன்

ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்கு வந்து பாகிஸ்தான் பிரதமர் பேசுகிறார். அங்கே அவர் பேசும்போது, பாகிஸ்தான் நாட்டவர் யாரும் இந்தியா எல்லைப் பக்கம் போகக் கூடாது என்கிறார். இதுதான் நல்ல விஷயம்.

ஆனால் கடந்த 1965, 1971-ம் ஆண்டுகளில் செய்த அதே தவறை பாகிஸ்தான் மீண்டும் செய்யக் கூடாது. அந்த தவறை பாகிஸ்தான் செய்வதற்கு முன்னர், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், பலூச் மற்றும் பஸ்தூன் மனித உரிமை மீறல்களை நினைவில் கொள்ள வேண்டும்.

பாகிஸ்தான் தமது தவறை தொடர்ந்து செய்தால் அந்த நாடு துண்டு துண்டாக சிதைந்து போவதில் இருந்து எந்த சக்தியாலும் காப்பாற்ற முடியாது.

இவ்வாறு ராஜ்நாத்சிங் கூறினார்.

English summary
Union Defence Minister Rajnath Singh has warned that If Pakistan continues it repeated mistakes like 1965 and 1971,no power in will be able to protect Pak from getting further divided into pieces
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X