For Daily Alerts
Just In
இனி போர் விமானிகளாக பெண்கள்... பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்!!
டெல்லி: விமானப் படையின் போர் விமானங்களில் பெண்களை விமானிகளாக அமர்த்த பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் தெரிவித்துள்ளது.
அண்மையில் விமானப்படையின் 83 வது ஆண்டு விழா உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத் அருகே உள்ள ஹிண்டன் விமானப் படை தளத்தில் நடைபெற்றது.
அந்த நிகழ்ச்சியில் பேசிய விமானப் படை தளபதி அரூப் ராகா, போர் விமானிகளாக இனி பெண்களையும் நியமிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறோம் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் இன்று போர் விமானங்களில் விமானிகளாக பெண்களை ஈடுபடுத்த பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் தெரிவித்துள்ளது. தற்போது பயிற்சியில் உள்ள பிரிவில் இருந்தே பெண் போர் விமானிகள் தேர்வு செய்யப்படவும் உள்ளனர்.
Comments
English summary
Ministry of Defence has approved induction of women into the Fighter Stream of IAF.
Story first published: Saturday, October 24, 2015, 15:17 [IST]