For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காருக்குள் 60 வயது முதியவர் வெறியாட்டம்.. மனைவியை வெட்டி, குத்தி, அறுத்துக் கொடூர கொலை!

டெல்லியில் காருக்குள் வைத்து தனது மனைவியைக் கொன்ற 60 வயது கணவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லியில் 58 வயதுப் பெண்ணை அவரது 60 வயதுக் கணவர் மிகக் கொடூரமான முறையில் கொன்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காருக்குள் வைத்து தனது மனைவியை கத்தியால் குத்தியும், வெட்டியும், கழுத்தை அறுத்தும் கொடூரமாக கொலை செய்துள்ளார அந்த முதியவர். போலீஸார் தறபோது அவரைக் கைது செய்துளளனர். கொல்லப்பட்ட பெண்ணுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

Delhi: 60-year-old tries to behead wife, stabs her to death in car

இந்தக் கொலைக்கு காரணமாக போலீஸார் கூறுவது, சம்பவத்தன்று யாரோ ஒரு ஆணுடன், அந்தப் பெண் போனில் பேசிக் கொண்டிருந்தது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதமே.

அந்த நபரின் பெயர் முகேஷ். இவரது மனைவி பெயர் மஞ்சு. நேற்று இரவு 11.30 மணியளவில் வெளியில் போய் விட்டுத் திரும்பியுள்ளனர். தாங்கள் குடியிருக்கும் ஹரிநகரில் உள்ள அபார்ட்மென்ட்டை அடைந்ததும் காருக்குள் வைத்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் மூண்டது.

அப்போது தனது கையில் இருந்த கத்தியை எடுத்து மனைவியின் கழுத்தை அறுத்துள்ளார் முகேஷ். பின்னர் அவரை சரமாரியாக கத்தியால் குத்தினார். உடல் முழுவதும் சரமாரியாக குத்தினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர்.

ரத்த வெள்ளத்தில் கிடந்த மஞ்சு மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். போலீஸார் விரைந்து வந்து முகேஷைக் கைது செய்தனர். தங்களது தாயார் குறித்து போலீஸாரிடம் அவரது மகனும், மகளும் கூறுகையில், எங்களது தாயார்தான் வேலைக்குப் போய் சம்பாதித்து வந்தார். எங்களது தந்தை சரியாக வேலைக்குப் போவதில்லை, சம்பாதிப்பதில்லை என்று போலீஸாரிடம் கூறியுள்ளனர்.

முகேஷ் குடிப்பழக்கம் உள்ளவராம். அடிக்கடி மஞ்சுவை அடிப்பது வழக்கமாம். ஒரு ஜவுளி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார் மஞ்சு. அவர் மீது சந்தேகம் கொண்டு சண்டை பிடிப்பது முகேஷின் வழக்கம் என்கிறார்கள். நேற்றும் கூட மஞ்சு யாரோ ஒரு ஆணுடன் பேசியதுதான் முகேஷை ஆத்திரமடைய வைத்ததாக கூறப்படுகிறது.

அதேசமயம், மனைவியை திட்டமிட்டு முகேஷ் கொலை செய்திருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கிறார்கள்.

English summary
A 60 year old person murdered his wife in car in South Delhi yesterday night. He was arrested and police are invetigating the chilliing incident.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X