இந்த வெற்றி உனக்கான பரிசு.. மனைவிக்கு காதலோடு கேக் ஊட்டிய கெஜ்ரிவால்.. இன்று இப்படி ஒரு ஸ்பெஷலா!
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்று இருக்கும் நிலையில் இன்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவாலின் பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது.
Recommended Video
டெல்லி: டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்று இருக்கும் நிலையில் இன்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவாலின் பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தொடக்கத்தில் இருந்தே ஆம் ஆத்மி கட்சி முன்னிலை பெற்றுள்ளது.கிட்டத்தட்ட இது சென்ற தேர்தலுக்கு இணையான வெற்றியாகும். இதனால் டெல்லி ஆம் ஆத்மி அலுவலகம் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுப்பட்டு வருகிறது.
டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி 63 இடங்களில் முன்னிலை, பாஜக 7 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.டெல்லியில் காங்கிரஸ் கட்சி ஒரே ஒரு இடத்தில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது.
என்ன நாள்
ஆம் ஆத்மியின் வெற்றி ஒருபுறம் இருக்க, இன்று அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவாலின் பிறந்த நாள் என்பதும் சிறப்பு ஆகும். இதனால் இன்று வீட்டிலேயே அரவிந்த் கெஜ்ரிவால் மனைவியின் பிறந்த நாளை கொண்டாடினார். மனைவிக்கு மஞ்சள் நிற கேக்கை வெட்டி, அரவிந்த் கெஜ்ரிவால் காதலோடு வாயில் ஊட்டி விட்டார். அங்கு ஆம் ஆத்மியின் மூத்த உறுப்பினர்கள் பலர் இடம்பெற்று இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த பிறந்த நாள் விழா மிகவும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
கேக் வெட்டி
மனைவியுடன் கேக் வெட்டிய கெஜ்ரிவால், ''நம்முடைய இந்த பெரும் வெற்றிதான் உன்னுடைய பிறந்த நாள் பரிசு'' என்று அவரின் மனைவியிடம் குறிப்பிட்டார். தொண்டர்கள் எல்லோரின் முன்னிலையில் கெஜ்ரிவால் அன்போடு இதை குறிப்பிட்டார். இந்த பிறந்த நாள் விழா இணையம் முழுக்க வைரலாகி உள்ளது. அட இதை விட தன்னுடைய மனைவிக்கு பிறந்த நாள் அன்று அரசியல்வாதி ஒருவர் என்ன பரிசு அளிக்க முடியும். சுனிதா கண்டிப்பாக சந்தோசமாக இருப்பார்.
|
என்ன ஒரு நாள்
அவரின் வாழ்நாளில் இது மிகப்பெரிய சந்தோசமான நாளாக இருக்கும் என்று பலர் குறிப்பிட்டுள்ளனர். அரவிந்த் கெஜ்ரிவால் 6 வருடங்களுக்கு முன்புதான் அரசியலுக்கு வந்தார். அப்போது, அவருக்கு உறுதுணையாக சுனிதா மட்டுமே இருந்தார். திடீரென்று அரசியலுக்கு வரும் அவரின் முடிவை, உடன் இருந்து மனைவி சுனிதா ஆதரித்தார். அவரின் கஷ்டமான நேரங்களில் சுனிதாதான் உடன் இருந்தார். இதோ தற்போது வெற்றியிலும் இவர்கள் இருவரும் ஒன்றாக கை கோர்த்து கேக் வெட்டி கொண்டாடுகிறார்கள்.
என்ன புகார்
முன்னதாக தேர்தல் பிரச்சாரத்தின் போது அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் தனது அரசியல் நிலைப்பாட்டை தெரிவித்து இருந்தார். அதில், என்னுடைய கணவர் மீது மோசமான புகார்களை வைக்கிறார்கள். பாஜகவால் டெல்லி அரசியல் மிக மோசமான நிலையை அடைந்துவிட்டது. மிகவும் கீழ் தரமான வகையில் பிரச்சாரங்களை மேற்கொள்கிறார்கள். என்னுடைய குடும்பத்தை பற்றி தவறாக பேசுகிறார்கள்.
உண்மை என்ன
எங்களை பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என்று கூட விமர்சனம் செய்கிறார்கள். ஆனால் அதெல்லாம் டெல்லி மக்கள் காதில் போட்டுக்கொள்ள மாட்டார்கள். அவர்கள் உண்மைக்கு வாக்களிப்பார்கள். அவர்கள் நேர்மைக்கு வாக்களிப்பார்கள். டெல்லியின் முன்னேற்றத்திற்காக மக்கள் வாக்களிப்பார்கள் என்று சுனிதா கெஜ்ரிவால் குறிப்பிட்டு இருந்தார். அவர் கூறியது போலவே தற்போது, ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது.