For Daily Alerts
Just In
இந்தியாவின் முதல் “மண்ணெண்ணெய் இல்லா” நகரம் ஆனது டெல்லி
டெல்லி: இந்தியாவில் மண்ணெண்ணெய் பயன்பாடு இல்லாத முதல் நகரம் என்ற பெருமையை தலைநகர் டெல்லி தட்டிச் சென்றுள்ளது.
டெல்லியில் மண்ணெண்ணெய் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கும் வகையிலான 2012 ஆம் ஆண்டு திட்டத்தின்படி, மண்ணெண்ணெய் பெறும் ரேஷன் அட்டைகளுக்கு இலவச கேஸ் சிலிண்டர் வழங்கப்பட்டுள்ளது.
இதனால், டெல்லியில் அனைத்துத் தரப்பு மக்களும் கேஸ் சிலிண்டர்களை பயன்படுத்துகின்றனர். எனவே, மண்ணெண்ணெய்க்கு அளிக்கப்பட்டு வந்த மானியம் முற்றிலும் இல்லாமல் போனது.
டெல்லியில் எப்போதும் இனி மண்ணெண்ணெய் விற்பனை செய்யக் கூடாது என்றும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுச் சூழல் காப்பற்றப்படுவதோடு, மண்ணெண்ணெய் அடுப்புகளால் ஏற்படும் விபத்துகளும் தடுக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
Comments
English summary
The Delhi Government on Tuesday announced that the national capital has become the first 'kerosene-free city' in the country. "With the successful implementation of 'Delhi: A Kerosene-Free City Scheme, 2012', no subsidised kerosene is being issued in the national capital and the country can save up to Rs.200 crores every year," said S S Yadav, Commissioner, Food Supply and Weights and Measures.