நண்பர் வீட்டு பணிப்பெண்ணை துப்பாக்கி முனையில் பலாத்காரம் செய்த எஸ்.ஐ. டிஸ்மிஸ்
டெல்லி: டெல்லியில் பணிபுரிந்த துணை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராணி பாக் பகுதியில் வசிக்கும் தனது நண்பர் வீட்டு 23 வயது பணிப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
டெல்லியில் உள்ள பஞ்சாபி பாக் காவல் நிலையத்தில் துணை சப்-இன்ஸ்பெக்டராக இருந்தவர் ஜக்வீர் சிங். அவர் கடந்த வியாழக்கிழமை இரவு மது அருந்திவிட்டு ராணி பாக் பகுதியில் உள்ள தனது நண்பரின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு நண்பரின் 23 வயது பணிப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து அந்த பெண் அளித்த புகாரின்பேரில் ஜக்வீர் சிங் மீது வழக்குப்பதிவு செய்து அவர் கைது செய்யப்பட்டார். ஜக்வீர் சிங் உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட்டார். சிசிடிவி கேமராவில் ஜக்வீர் கையில் துப்பாக்கியுடன் வந்தது பதிவாகியுள்ளது. அவர் அந்த பெண்ணை துப்பாக்கி முனையில் பலாத்காரம் செய்துள்ளார்.
சம்பவம் நடந்த வீடு வியாபாரி ஒருவருக்கு சொந்தமானது. அவர் மீது பல வழக்குகள் உள்ளது. வழக்கு தொடர்பாக அவர் வீட்டிற்கு அடிக்கடி சென்றபோது அவரும், ஜக்வீரும் நண்பர்களாகியுள்ளனர்.
போலீஸ்காரர் ஒருவர் பெண்ணை பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் தெரிவித்துள்ளன. மேலும் குற்றவாளிக்கு கடும் தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்று அந்த கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.