For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"முதல்வரை வேலைக்காரர் போல ஆளுநர் நடத்துறாருங்க..." எம்.பிக்கள் குமுறல்.. இது டெல்லியில்!

டெல்லி ஆளுநர் அனில் பைஜால், முதல்வர் கெஜ்ரிவாலை வேலைக்காரன் போல நடத்துவதாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

By Dakshinamurthy
Google Oneindia Tamil News

டெல்லி: நாடாளுமன்ற விவாதத்தின்போது பேசிய எதிர்க்கட்சி எம்.பிக்கள், டெல்லி துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் - முதல்வர் கெஜ்ரிவால் இடையேயான மோதல் முற்றி வருவதாக தெரிவித்தனர்.

டெல்லியின் முதல்வராக கெஜ்ரிவால் இருந்தாலும், ஆட்சியில் அடிக்கடி ஆளுநர்கள் தலையிடுவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. முன்னாள் ஆளுநர் நஜீப் ஜங்கை தொடர்ந்து தற்போதைய ஆளுநர் அனில் பைஜாலும் கெஜ்ரிவாலுடன் மோதல் போக்கை கடைபிடிப்பதாக நாடாளுமன்ற எம்.பிக்கள் புகார் அளித்துள்ளனர்.

Delhi Governor is treating CM like a peon says MPs

ஆட்சி அதிகாரத்தில் தலையிடுவது மட்டுமில்லாமல், டெல்லி முதல்வரை வேலைக்காரன் போல ஆளுநர் அனில் நடத்துவதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர். இதுகுறித்து பேசிய விவாதத்தின் போது பேசிய டி.ராஜா, மக்கள் தேர்ந்தெடுத்த அரசையும், பிரதிநிதியையும் இவ்வாறு நடத்துவது சரியில்லை என்றும், புதுச்சேரியில் கூட இதே நிலை தொடர்வதாக தெரிவித்தார்.

பின்னர் சபாநாயகர் சீட்டில் அமர்ந்திருந்த குரியன், மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை தலைவர் ஹர்திப் சிங் பூரியை இந்த விவகாரத்தில் தலையிடும்படி கேட்டுக்கொண்டார். அதற்கு பதிலளித்த பூரி, நான் நாற்பது ஆண்டுகாலமாக பல பிரச்சனைகளை சந்தித்திருக்கிறேன். தீவிரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கேன். ஆனால் இந்த பேச்சுவார்த்தை அதைவிட கடினமானதாக இருக்கும் என்று கருதுகிறேன் என்றார்.

English summary
Delhi Governor is treating CM like a peon says MPs in Rajyasabha. And also they added the central should involve in the matter so that people of captial of india might get better benefits.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X