For Quick Alerts
For Daily Alerts
Just In
டெல்லியில் "பீர்" பால்களின் வயது வரம்பை 25-ல் இருந்து 21ஆக குறைக்க முடிவு!!
டெல்லி: பீர் குடிப்பதற்கான சட்டப்பூர்வ வயது வரம்பை 25 வயதில் இருந்து 21 ஆக குறைக்க டெல்லி அரசு முடிவு செய்துள்ளது.
டெல்லியில் தற்போது பீர் குடிப்பதற்கான சட்டப்பூர்வமான வயது 25 ஆக இருக்கிறது. இதனை தளர்த்தி 21ஆகக் குறைக்க டெல்லி அரசு முடிவு செய்துள்ளது.
இது தொடர்பான பரிந்துரை விரைவில் மாநில அமைச்சரவை முன் தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதல் பெற உள்ளது. நாட்டின் பல மாநிலங்களில் பீர் குடிப்பதற்கான வயது 21ஆக இருப்பதை சுட்டிக்காட்டி இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
இந்த வயது வரம்பு ஒயின், பீர் குடிப்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும்; 'ஹாட்' வகை மது அருந்துபவர்களுக்கான வயது வரம்பு 25 ஆகவே நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments
English summary
Delhi government is contemplating to bring down the legal drinking age for beer from the existing 25 to 21 years, with the Excise Department preparing a proposal in this regard.
Story first published: Thursday, June 4, 2015, 10:36 [IST]