தினகரன் வழக்கில் தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி ஹைகோர்ட் நோட்டீஸ்!
தனது தலைமையிலான அணியை தனித்து செயல்பட அனுமதிக்க கோரி தினகரன் தொடர்ந்த வழக்கில் தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
Recommended Video
டெல்லி: அதிமுக அம்மா பெயரில் குக்கர் சின்னத்துடன் தனது தலைமையிலான அணியை தனித்து செயல்பட அனுமதிக்க கோரி தினகரன் தொடர்ந்த வழக்கில் தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
உள்ளாட்சி தேர்தலில் அதிமுக அம்மா அணி என்ற பெயரில் போட்டியிடுவதற்கு அனுமதி தரக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் நேற்று மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில், இறுதி உத்தரவு வரும் வரை அதிமுக அம்மா அணி என்ற பெயர் மற்றும் குக்கர் சின்னத்துடன் செயல்பட தாம் விரும்புவதாக தினகரன் தெரிவித்திருந்தார்.
குக்கர் சின்னத்தில்
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வெற்றியை கருத்தில் கொண்டு உள்ளாட்சி தேர்தலில் குக்கர் சின்னத்தில் தனி அணியாக தாங்கள் செயல்பட விரும்புவதாகவும் டிடிவி தினகரன் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
ஏப்ரலில் உள்ளாட்சித் தேர்தல்
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வரும் ஏப்ரல் மாதத்தில் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக தினகரனின் வக்கீல் தெரிவித்தார்.
குக்கர் சின்னம் வேண்டும்
இதனை முன்னிட்டு தினகரனின் தலைமையிலான அணியை அதிமுக அம்மா அணி என்ற பெயரில் குக்கர் சின்னத்துடன் தனித்து செயல்பட அனுமதிக்க வேண்டும் என்றும் தினகரனின் வக்கீல் வாதிட்டார்.
டெல்லி ஹைகோர்ட் நோட்டீஸ்
இதையடுத்து இந்த வழக்கில் தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி ஹைகோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தினகரன் வழக்கில் ஒரு வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.