ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய டெல்லி ஹைகோர்ட் இடைக்காலத் தடை!
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்தை ஜூலை 3ஆம் தேதி வரை கைது செய்ய டெல்லி ஹைகோர்ட் தடைவிதித்துள்ளது.
Recommended Video
டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை ஜூலை 3ஆம் தேதி வரை கைது செய்ய டெல்லி ஹைகோர்ட் தடைவிதித்துள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் இன்று ஆஜராகுமாறு சிபிஐ சம்மன் அனுப்பியிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி ப.சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவை இன்று விசாரித்த டெல்லி ஹைகோர்ட் ப.சிதம்பரத்திற்கு இடைக்கால முன்ஜாமீன் வழங்கியுள்ளது.
ஜூலை 3ஆம் தேதி வரை ப.சிதம்பரத்தை கைது செய்யவும் டெல்லி ஹைகோர்ட் தடை விதித்துள்ளது.
ப.சிதம்பரம் இன்று ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பியுள்ள நிலையில் அவர் மீது கைது நடவடிக்கை பாயாமல் இருக்கும் வகையில் டெல்லி ஹைகோர்ட் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
ஏர்செல் மேக்ஸிஸ் வழக்கு தொடர்பாக ஜூன் 5ஆம் தேதி வரை ப.சிதம்பரத்தை கைது செய்ய பாட்டியலா நீதிமன்றம் நேற்று இடைக்காலத் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.