For Daily Alerts
Just In
டெல்லியில் ஜேஎன்யு மாணவர்கள் பேரணி.. தண்ணீரை பீய்ச்சியடித்து கூட்டத்தை கலைக்க போலீசார் முயற்சி
டெல்லியில் ஜேஎன்யு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆயிரக்கணக்கானோர் பேரணி நடத்தினர்.
டெல்லி: தலைநகர் டெல்லியில் ஜேஎன்யு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆயிரக்கணக்கானோர் பேரணி நடத்தினர்.
டெல்லி ஜேஎன்யு பல்கலைக்கழகத்தில் பாலியல் புகாருக்குள்ளான பேராசிரியர் அதுல் ஜோரியை நீக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஊர்வலத்தில் ஈடுபட்டனர்.
பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து நாடாளுமன்றம் வரை மாணவர்களும் ஆசிரியர்களும் ஊர்வலமாக சென்றனர். அப்போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்த முயன்றனர்.
இதனால் இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தள்ளுமுள்ளால் அப்பகுதியே போர்க்களம் போல் காட்சியளித்தது.
இதையடுத்து மாணவர்கள் மீது தண்ணீரை பீய்ச்சியடித்து போலீசார் கூட்டத்தை கலைக்க முயன்றனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களையும் போலீசார் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Comments
English summary
Delhi JNU students and teachers protest against Professor Athul. They are rallying from University to Parliament Police tried to disolve the crowed by peeling water.
Story first published: Friday, March 23, 2018, 18:50 [IST]