தற்கொலை செய்த மாடல் அழகியின் கொடூர போட்டோக்களை வெளியிட்ட சகோதரி
டெல்லி: டெல்லியில் தற்கொலை செய்து கொண்ட மாடல் பிரியங்கா கபூரை அவரது கணவர் நிதின் தாக்கியதால் காயமடைந்தபோது எடுத்த புகைப்படத்தை அவரது சகோதரி வெளியிட்டுள்ளார்.
டெல்லியில் மாடல் அழகி பிரியங்கா கபூர் தனது கணவர் நிதின் சாவ்லாவின் கொடுமையை தாங்க முடியவில்லை என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நிதினை கைது செய்தனர்.
விசாரணையில் நிதின் கூறுகையில்,
பிரியங்கா இரவு நேரத்தில் வீட்டில் தங்காமல் பார், பப்புகள் என்று சுற்றுவார். குடிப்பழக்கம், போதைப் பொருள் பழக்கம் உள்ளவர். எனக்கு வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் படாடோபமாக வாழ முடியாது என நினைத்து என்னை விட்டு சென்றுவிடுவாரோ என அஞ்சினேன் என்றார்.
இந்நிலையில் பிரியங்காவின் சகோதரி டிம்பி கபூர் நிதின் கையால் அடிவாங்கிய காயத்துடன் இருக்கும் பிரியங்காவின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
பிரியங்கா தனது நண்பருடன் டீ குடிக்க வெளியே சென்றதற்காக நிதின் அவரை காலை 4 மணிக்கு எழுப்பி அடித்துள்ளார். முகத்தில் ஓங்கி குத்தியுள்ளார், அறைந்துள்ளார், எட்டி உதைத்துள்ளார். கழுத்தை பிடித்து அவரது தலையை சுவரில் மோதியுள்ளார். இது குறித்து பிரியங்கா எங்களுக்கு தகவல் கொடுத்ததும் அவரை எங்கள் வீட்டிற்கு அழைத்து வந்தோம்.
சில நாட்களில் பிரியங்கா சமாதானமாகி கணவர் வீட்டிற்கு சென்றுவிட்டார். பிரியங்காவை அவரது மாமியாரும் தாக்கியுள்ளார். நிதினுக்கு பயந்து பிரியங்கா தனக்கு நேர்ந்த கொடுமையை எல்லாம் எங்களுக்கு தெரிவிக்காமல் பின்னர் மறைத்துவிட்டார் என்றார்.