டெல்லி மர்ம மரணம்.. குடும்பத்திடம் தாத்தாவின் ஆவி பேசியது என்ன.. பகீர் குறிப்புகள் வெளியானது
11 பேர் டெல்லியில் மர்மமாக இறந்த விஷயத்தில், அந்த குடும்பத்திடம் ஆவி ஒன்று பேசியதன் குறிப்புகள் வெளியாகி உள்ளது.
Recommended Video
டெல்லி: 11 பேர் டெல்லியில் மர்மமாக இறந்த விஷயத்தில், அந்த குடும்பத்திடம் ஆவி ஒன்று பேசியதன் குறிப்புகள் வெளியாகி உள்ளது. வீட்டு தலைவரின் தந்தை இறந்து ஆவியாக வந்து பேசியது என்னென்ன என்று குறிப்புகளில் உள்ளது.
டெல்லி புராரி பகுதியில் நேற்று ஒரு வீட்டிலிருந்து 11 பிணங்கள் கண்டெடுக்கப்பட்டது. அந்த வீட்டில் போலீஸ் விசாரணையில் நிறைய கடிதங்கள், டைரிக்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
அதேபோல் இவர்கள் எப்படி எல்லாம் இந்த சடங்கிற்கு தயாரானார்கள் என்றும் சிசிடிவி குறிப்புகள் மூலம் தெரிய வந்துள்ளது. குடும்ப உறுப்பினர்கள் ஒன்றாக சேர்ந்து சென்று போய், தூக்கு மாட்டிக்கொள்ள வசதியாக கயிறு, புதிய நாற்காலி, இரும்பு கம்பிகள், கட்டுவதற்கு துணி என்று வாங்கி வந்துள்ளனர். இது எல்லாம் தாத்தா ஆவியின் ஆணையின் பேரில் செய்துள்ளனர்.
ஹரித்வார் செல்லாதே
அந்த டைரி குறிப்புகளில் தற்போது புதிய விஷயம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன்படி, புராரியின் இறந்து போன தந்தை தினமும் என்ன பேசுகிறார் என்ற குறிப்புகள் இருந்துள்ளது. அதில் ''நீ இந்த சடங்கை செய்தால்தான் என் ஆத்மா சாந்தி அடையும். உங்களுக்கும் மோட்சம் கிடைக்கும். என்னுடன் 5 ஆவி இருக்கிறது. நீ ஹரித்வார் போக வேண்டாம். இந்த சடங்கை வீட்டிலே செய்தால் எல்லாருக்கும் மோட்சம் கிடைக்கும்'' என்றுள்ளது.
சிசிடிவி பதிவுகள்
அதேபோல் இவர்கள் எப்படி எல்லாம் இந்த சடங்கிற்கு தயாரானார்கள் என்றும் சிசிடிவி குறிப்புகள் மூலம் தெரிய வந்துள்ளது. குடும்ப உறுப்பினர்கள் ஒன்றாக சேர்ந்து சென்று போய், தூக்கு மாட்டிக்கொள்ள வசதியாக கயிறு, புதிய நாற்காலி, இரும்பு கம்பிகள், கட்டுவதற்கு துணி என்று வாங்கி வந்துள்ளனர். இதை எல்லா தாத்தாவின் ஆவியின் ஆணையின் பேரில் செய்துள்ளனர்.
நன்றாக செல்கிறது
இதற்கு பின் உள்ள டைரி குறிப்பில், இறந்த முதியவரிடம் பதில் சொல்லும் விதமாக '' இங்கே எல்லாம் நன்றாக செல்கிறது. குடும்ப உறுப்பினர்கள் எல்லோரும் சடங்கிற்கு சம்மதம் தெரிவித்து இருக்கிறார்கள். விரைவில், சடங்கை வெற்றிகரமாக செய்யலாம். சடங்கிற்கு தேவையான பொருட்களை வாங்கிவிட்டோம்'' என்று குறிப்புகள் உள்ளது.
இன்னொரு குடும்பமும் ஆசை
இதில் மிகவும் மோசமான அதிர்ச்சியளிக்கும் விஷயம் ஒன்றும் இருந்துள்ளது. இந்த குடும்பம் போலவே, அவர்களின் உறவினர் குடும்பம் ஒன்று கடந்த சில வருடங்களாக சிக்கி இருந்துள்ளது. அவர்கள் வசதி பெறுவதற்கு இந்த சடங்கை செய்யலாமா என்று கேட்டுள்ளனர். அதற்கு அந்த ஆவி, இப்போது வேண்டாம், இந்த சடங்கு முடித்த பின் செய்யலாம் என்று கூறியுள்ளதாக குறிப்பில் உள்ளது.