டெல்லி மர்ம மரணம்.. கடைசி நேரத்தில் வந்து காப்பாற்றுவதாக வாக்களித்த சாமியார்.. போலீஸ் வலைவீச்சு
டெல்லியில் 11 பேர் மர்மமாக இறந்த விஷயத்தில், சாமியார் ஒருவருக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
டெல்லி: டெல்லியில் 11 பேர் மர்மமாக இறந்த விஷயத்தில், சாமியார் ஒருவருக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. போலீஸ் அந்த சாமியாருக்கு தற்போது வலை விரித்துள்ளது.
டெல்லி புராரி பகுதியில் நேற்று ஒரு வீட்டிலிருந்து 11 பிணங்கள் கண்டெடுக்கப்பட்டது. அந்த வீட்டில் போலீஸ் விசாரணையில் நிறைய கடிதங்கள், டைரிக்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
எப்படி தற்கொலை செய்தால் மோட்சம் கிடைக்கும் என்று குறிப்புகள் உள்ளது. எதோ ஒரு மத சடங்கிற்காக இவர்கள் இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதை வைத்து போலீஸ் தீவிரமாக விசாரித்து வருகிறது.
பிரேத பரிசோதனை முடிவு
இந்த மர்ம மரணத்தில் நேற்று இரவு முழுக்க பரிசோதனை செய்யப்பட்டு, தற்போது பிரேத பரிசோதனை முடிவுகள் வெளியாகி உள்ளது. அதன்படி இவர்கள் கொலை செய்யப்பட்டதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு என்று கூறியுள்ளனர். ஆனால் முழுமையாக பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகவில்லை. இவர்கள் தற்கொலை செய்திருக்கவே வாய்ப்புகள் அதிகம் என்று போலீஸ் கூறுகிறது.
சைலன்ட் மோடில் போன்
அந்த வீட்டில் போலீஸ் நடத்திய சோதனையில், துணி வைக்கும் இடத்தில் செல்போன் ஒன்று சைலன்ட் மோடில் இருந்துள்ளது. அதை சுவற்றுடன் டேப் போட்டு ஒட்டி வைத்து இருந்துள்ளனர். இதற்கும் கூட, என்ன காரணம் என்று போலீஸ் கண்டுபிடித்துள்ளது. அதன்படி, இந்த முக்தி அடையும் சடங்கிற்கு செல்போன் ஆகாது, அதை பக்கத்தில் வைத்துக் கொள்ள கூடாது என்று ஒரு சாமியார் சொல்லி இருக்கிறார்.
யார் அந்த சாமியார்
அந்த செல்போன் உரையாடலின் படி ஒரு பிரபல சாமியாரிடம் இந்த குடும்ப உறுப்பினர்கள் அடிக்கடி போனில் பேசி இருக்கிறார்கள். அந்த போன் ரெக்கார்டுகள் எல்லாம் தற்போது கைப்பற்றப்பட்டுள்ளது. அவர் யார் என்ற விவரத்தை போலீஸ் இன்னும் வெளியிடவில்லை. தற்போது அந்த சாமியார் இருக்கும் இடத்தை போலீஸ் கண்டுபிடிக்கும் முடிவில் உள்ளது.
காப்பாற்றுவார்
அங்கு கிடைத்த டைரி குறிப்பில் மிக முக்கியமான விஷயம் ஒன்று இருந்துள்ளது. அதில், நீங்கள் எல்லாம் மிகவும் நல்ல பூஜை செய்து கடவுளுடன் ஐக்கியம் ஆனவர்கள். உங்களுக்கு தூக்கு மூலம் மரணம் வராது. நீங்கள் தூக்கு மாட்டி சடங்கு செய்யுங்கள். ஏதாவது தவறாக நடந்தால், கடைசி நேரத்தில் சாமியார் வந்து காப்பாற்றுவார் என்று அந்த மர்ம சாமியார் கூறியதாக டைரியில் எழுதப்பட்டுள்ளது.