கார் ஓட்டும் பெண்களுக்கு “டோல் சர்வீஸ்” ஃப்ரீ – இது டெல்லியின் மகளிர் தின ஆபர்!
டெல்லி: டெல்லி அருகே நொய்டாவில் நேற்று மகளிர் தினத்தினை ஒட்டி கார் ஓட்டி வரும் பெண்களுக்கு சுங்க கட்டணம் இலவசம் என்ற அறிவிப்பு வெளியாகி எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருந்தது.
உலக மகளிர் தினத்தையொட்டி பல்வேறு வித்தியாசமான அறிவிப்புகள், விளம்பரங்கள் போன்றவை ஒவ்வொரு ஆண்டும் வெளியாவது வழக்கம்.
இதில் சற்று வித்தியாசமாக டெல்லி அருகே உள்ள நொய்டாவில் எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் வாகனங்களுக்கு சுங்கம் வசூலிக்கும் தனியார் நிறுவனம் வித்தியாசமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.
இதில் சர்வதேச மகளிர் தினமான ( நேற்று) ஞாயிற்றுக்கிழமை எங்களது சாலையின் வழியாக கார் ஓட்டி வரும் பெண் டிரைவர்களுக்கு சுங்க கட்டணம் இலவசம் என்று அறிவித்துள்ளது.
நொய்டா தொடங்கி மயூர் விகார் வரையிலான எட்டு வழி சாலையான 9.2 கிலோ மீட்டர் தொலைவு உள்ள இந்த எக்ஸ்பிரஸ் ஹைவேயை இந்நிறுவனம் பராமரித்து வருகிறது.
இந்த இலவச சலுகை சாலையின் இருபுறமும் அமைக்கப்பட்டுள்ள சுங்க சாவடிகளிலும் வழங்கப்படும் என்றும் அந்த நிறுவனம் அதிரடியாக அறிவித்தது.