சுனந்தா கொலை வழக்கு: பாக். பெண் பத்திரிகையாளரிடம் விசாரணை நடத்த டெல்லி போலீஸ் முடிவு!
டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கரின் கொலை தொடர்பாக பாகிஸ்தான் பெண் பத்திரிகையாளர் மெஹர் தராரிடம் டெல்லி போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.
சசி தரூரின் மனைவி சுனந்தா டெல்லி நட்சத்திர ஹோட்டலில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். கடந்த ஓராண்டு காலமாக இது குறித்து விசாரணை நடத்திய டெல்லி போலீசார் சில நாட்களுக்கு சுனந்தா கொலை செய்யப்பட்டதாக தெரிவித்தனர்.
ஆனால் தமது மனைவி சுனந்தா கொலை செய்யப்பட்டார் என்ற டெல்லி போலீஸின் அறிக்கை அதிர்ச்சி அளிப்பதாக கூறியிருந்தார். மேலும் சசி தரூருக்கும் பாகிஸ்தான் பெண் பத்திரிகையாள மெஹர் தராருக்குமான தொடர்புதான் சுனந்தாவின் மரணத்துக்கு காரணம் என்ற தகவலும் வெளியானது.
இதனால் மின்னஞ்சல் மூலம் மெஹர் தராருக்கு கேள்விகளை அனுப்பி அவற்றுக்கு பதில் அளிக்குமாறு அவரை கேட்டுக்கொள்ள டெல்லி போலீசார் முடிவு செய்துள்ளனர்.
சுனந்தா புஷ்கர் கொலை வழக்கு விசாரணை தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளிக்க தயாராக இருப்பதாக மெஹர் தரார் ஏற்கனவே கூறி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.