குடியரசு தினத்தையொட்டி தேடப்படும் தீவிரவாதிகளின் போஸ்டர்களை ஒட்டிய டெல்லி போலீஸ்
டெல்லி: குடியரசு தினத்தை முன்னிட்டு தேடப்படும் தீவிரவாதிகளின் புகைப்படங்கள் அடங்கிய போஸ்டர்களை டெல்லி முழுவதும் போலீசார் ஒட்டியுள்ளனர்.
இந்த ஆண்டு குடியரசு தின கொண்டாட்டத்தில் பிரான்ஸ் அதிபர் பிரான்காய்ஸ் ஹாலண்டே சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். இதற்காக அவர் நேற்று மதியம் சன்டிகர் வந்தடைந்தார். அவரை வரவேற்க பிரதமர் நரேந்திர மோடி சன்டிகர் சென்றார்.
Delhi Police put posters of wanted terrorists ahead of Republic Day. pic.twitter.com/HB6lhzK91j
— ANI (@ANI_news) January 24, 2016
குடியரசு தின கொண்டாட்டத்தின்போது ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் ஹாலண்டே, மோடி ஆகியோரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாக உளவுத் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து டெல்லி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் தேடப்படும் தீவிரவாதிகளின் புகைப்படங்கள் அடங்கிய போஸ்டர்களை போலீசார் டெல்லி முழுவதும் ஒட்டியுள்ளனர். பொது இடங்களில் சந்தேகத்திற்கு இடமாக யாரையாவது பார்த்தாலோ அல்லது கேட்பாரற்று ஏதாவது பொருட்கள் கிடந்தாலோ உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்குமாறு டெல்லி போலீஸ் கமிஷனர் பஸ்ஸி மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
குடியரசு தின விழா கொண்டாடங்களை சீர்குலைக்க ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தக்கூடும் என்றும் உளவுத் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.