காக்கா ..குருவி கூட எட்டிப் பார்க்காத டெல்லி காங்., பா.ஜ.க. அலுவலகங்கள்!!
டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் படுதோல்வியை சந்தித்த காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சி அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டன. டெல்லியைப் பொறுத்தவரையில் ஆம் ஆத்மி கட்சியினர் தொடக்கம் முதல்வே வெற்றி முகத்தில் இருந்தனர்.
இன்று காலை முதலே ஆம் ஆத்மி கட்சியின் தலைமையகத்தில் கூட்டம் 'துடைப்ப'ங்களோடு அலை மோதியது.
Visuals from outside Congress headquarters in Delhi pic.twitter.com/Jx5r6qXmJ3
— ANI (@ANI_news) February 10, 2015
பாரதிய ஜனதா அலுவலகம், அதன் முதல்வர் வேட்பாளர் கிரண்பேடி வீடு ஆகியவற்றில் சொற்ப எண்ணிக்கையில் சில பத்திரிகையாளர்கள் மட்டுமே இருந்தனர். அக்கட்சியின் தொண்டர்கள் யாரையும் காணவில்லை. அத்துடன் பா.ஜ.க. மரண அடி வாங்கிய நிலையில் எவருமே எட்டிப்பார்க்காத இடமாகிப் போனது.
Preparations for Delhi Assembly election results at BJP office #DelhiPollResults pic.twitter.com/XqIsPM5yS3
— ANI (@ANI_news) February 10, 2015
அதேபோல்தான் காங்கிரஸ் கட்சி தலைமையகத்திலோ "ஈ காக்கா' கூட பறப்பதை காணமுடியவில்லை.. மருந்துக்கு ஒரு தொண்டரும் எட்டிப்பார்க்கவில்லை.. வெறிச்சோடியே காணப்பட்டது.
காங்கிரஸ் முட்டை வாங்கிய நிலையில் ஆவேசப்பட்ட தொண்டர்கள் பிரியங்காவுக்கு ஆதரவாக ராகுலுக்கு எதிராக முழக்கம் போட்டுவிட்டு கலைந்து போயினர்.