காதலியுடன் உல்லாசம் அனுபவிக்க தடை.... அண்ணனை குத்திக்கொன்ற தம்பி!
டெல்லியில் காதலியுடன் உல்லாசம் அனுபவிப்பதற்காக அண்ணை தம்பி ஒருவர் கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தம்பியை கைது செய்தனர்.
டெல்லி: டெல்லி புராரி பகுதியில் உள்ள வீட்டிற்கு காதலியை அழைத்து வந்த பல்கலைக்கழக மாணவர் , வீட்டை விட்டு வெளியே போக மறுத்த அண்ணனை கொலை செய்துள்ளார். இதுதொடர்பாக அந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
டெல்லி பல்கலைக்கழகத்தில் படித்து வரும் 23 வயது இளைஞர் ஹிமான்ஷு வெர்மா. இவர் தனது அண்ணன் ஹிதேஷுடன் புராரி பகுதியில் உள்ள வீட்டில் வசித்து வருகின்றார். இவர்களின் பெற்றோர் ஜான்சி பகுதியில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை நள்ளிரவ்ல ஹிமான்ஷு தனது காதலியை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். அவருடம் உல்லாசம் அனுபவிக்க எண்ணிய ஹிமான்ஷு அவரது அண்ணன் ஹிதேஷை வீட்டிலிருந்து வெளியே போகுமாறு கூறியுள்ளார். நள்ளிரவு 1.30 மணிக்கு இந்த குளிரில் எங்கு செல்வது என்று கேட்ட ஹிதேஷ் இது அடிக்கடி தொடருவதால் வெளியே செல்ல முடியாது என மறுத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ஹிமான்ஷு உடற்பயிற்சிக்கு பயன்படுத்தம் டம்ப்பெல்லைக் கொண்டு ஹிதேஷை சாகும் வரை தாக்கியுள்ளார். அவர் உயிரிழந்ததை உறுதி செய்த ஹிமான்ஷு ஒரு மணி நேரத்துக்குப் பின் போலீசாருக்கு போன் செய்து, வீட்டிற்கு வந்த 2 பேர் தனது அண்ணனை கொன்று விட்டதாக கூறியுள்ளார்.
இதையடுத்து போலீசார் வீட்டின் உரிமையாளரிடம் விசாரித்தனர். அப்போது வீட்டிற்கு யாரும் வரவில்லை என்று தெரிந்ததால் சந்தேகமடைந்த போலீசார் ஹிமான்ஷுவிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அதில் கொலை செய்ததை ஹிமான்ஷு ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.