For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சபரிமலைக்கு " இந்த" பெண்கள் வரமாட்டார்கள் - தேவசம் போர்டு பரபர தகவல்

Google Oneindia Tamil News

Recommended Video

    பக்தி உள்ள பெண்கள் சபரிமலைக்குள் வரமாட்டார்கள் - தேவசம் போர்டு- வீடியோ

    திருவனந்தபுரம்: சபரிமலைக்கு உண்மையான பெண் பக்தர்கள் வரமாட்டார்கள் என்று தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் தெரிவித்தார்.

    சபரிமலை கோயிலுக்கு 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. இதை நீக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

    அனைத்து வயதுடைய பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம் என 4 பேர் கொண்ட நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். இந்த தீர்ப்பை மறுசீராய்வு செய்ய போவதாக தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.

    ஆலோசனை

    ஆலோசனை

    எனினும் உச்சநீதிமன்றத்தை தீர்ப்பை அமல்படுத்துவது என்ற முடிவில் தேவசம் போர்டு உள்ளது. இதனால் பெண்களை எப்போது அனுமதிதப்பது என்பது குறித்தும் அவர்களின் பாதுகாப்பு குறித்து நேற்று முதல்வர் பினராயி விஜயனுடன் தேவசம் போர்டு அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

    பெண் பக்தர்கள்

    பெண் பக்தர்கள்

    இந்த ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் கூறுகையில் சபரிமலைக்கு உண்மையான பெண் பக்தர்கள் வரமாட்டார்கள். பெண்ணியவாதிகள் மட்டுமே வருகை தருவர்.

    100 ஏக்கர் நிலம்

    100 ஏக்கர் நிலம்

    வரும் ஐயப்பன் சீசனில் பெண்களை அனுமதிக்க வேண்டுமென்றால், அவர்களுக்கு தனியாக கழிப்பறைகள் கட்டிக் கொடுக்க காலஅவகாசம் வேண்டும். இந்த வசதிகளை விரிவுப்படுத்த ரூ.100 ஏக்கர் நிலம் ஒதுக்குமாறு அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.

    எண்ணிக்கை

    எண்ணிக்கை

    நிலக்கல்லில் இடம் ஒதுக்கி தருவதாக முதல்வர் உறுதி அளித்துள்ளார். சபரிமலை தீர்ப்பை மறுபரிசீலனை செய்வது பரிசீலனையில் உள்ளது. சபரிமலைக்கு பெண்கள் வந்தால் அக்கோயிலுக்கு வருவோரின் எண்ணிக்கை 40 சதவீதம் உயரும் என்று அவர் தெரிவித்தார்.

    கோரிக்கை

    கோரிக்கை

    இதனிடையே சபரிமலைக்கு பெண்களை அனுமதிப்பது என்பதற்கு பந்தளம் மன்னர் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும் சபரிமலைக்கு பெண்கள் அனுமதிப்பது என்ற வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனர்.

    அவசர சட்டம் பிறப்பிக்க

    அவசர சட்டம் பிறப்பிக்க

    இந்நிலையில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு வெளியானது. இதுகுறித்து பந்தள அரண்மனையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் மத்திய அரசை அணுகி சபரிமலை தீர்ப்பை அமல்படுத்தாதபடி அவசர சட்டம் பிறப்பிக்க கோரவுள்ளதாக முடிவு செய்துள்ளனர்.

    English summary
    Devaswom Board President Padmakumar says that no true demale devotees come to Sabarimala.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X