புரட்டாசி சனிக்கிழமை கூட்டம்.. திருப்பதியில் மூச்சு திணறலால் மயங்கிய பக்தர்கள்
சென்னை: புரட்டாசி சனிக்கிழமையை ஒட்டி திருமலை, திருப்பதியில் பக்தர்கள் வெள்ளம் அலைமோதுகிறது. இதன் காரணமாக தள்ளுமுள்ளு ஏற்பட்டு சிலருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.
இலவச தரிசனத்திற்காக பக்தர்கள் தங்க வைக்கப்படும் 31 அறைகளும் நிரம்பி மூன்று கிலோமீட்டருக்கு மேல் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
இதன் காரணமாக கூட்ட நெரிசல் ஏற்பட்டு தள்ளுமுள்ளு காரணமாக பெண்கள் உட்பட சில பக்தர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடன் வந்த பக்தர்கள், பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
நேற்று மொகரம் விடுமுறை, இன்று புரட்டாசி முதல் சனிக்கிழமை, நாளை ஞாயிற்றுக்கிழமை என்பதால் திருமலையில் கடுமையான பக்தர்கள் கூட்டம் நிலவுகிறது. அதேநேரம் விஐபி பாஸ்கள் இந்த மூன்று நாட்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.