For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விவசாயிகள் அனுமதித்தால் 30 மாதங்களில் கெயில் திட்டம்... தர்மேந்திர பிரதான் அறிக்கை!

விவசாயிகள் அனுமதித்தால் தமிழகத்தில் 30 மாதங்களில் கெயில் திட்டம் நிறைவேற்றப்படும் என்று அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

டெல்லி : விவசாயிகள் அனுமதித்தால் தமிழகத்தில் 30 மாதங்களில் கெயில் திட்டம் நிறைவேற்றப்படும் என்று அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். நாடாளுமன்றத்தில் எழுத்து மூலம் தாக்கல் செய்த அறிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கெயில் திட்டம் செயல்படுத்துவது குறித்து அதிமுக எம்பி பரசுராமன் மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு அமைச்சர் தர்மேந்திர பிரதான் நாடாளுமன்றத்தில் எழுத்து மூலமாக அறிக்கை தாக்கல் செய்திருந்தார்.

Dharmendra Pradhan submitted a written report at Parliament about Gail project

அதில் விவசாயிகள் அனுமதித்தால் தமிழகத்தில் 30 மாதங்களில் கெயில் திட்டம் நிறைவேற்றப்படும்.சுமூகமான சூழ்நிலைக்காக கெயில் திட்டம் நிறைவேற்றப்படாமல் நிலுவையில் இருக்கிறது. கெயில் திட்டம் தொடர்பாக தமிழகத்துடன் மத்திய அரசு தொடர்பில் இருக்கிறது.

கெயில் திட்டம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள தமிழக அரசின் வல்லுநர் குழுவுடன் மத்திய அரசு தொடர்ந்து 5 முறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. சரியான புரிதல் ஏற்படுத்தப்பட்ட பின்னர் விவசாயிகளின் அனுமதியுடன் கெயில் திட்டம் நிறைவேற்றப்படும் என்று அமைச்சர் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Petroleum minister Dharmendra Pradhan submitted a written report at Parliament about Gail project implementation in Tamilnadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X