For Daily Alerts
Just In
டீசல் விலை லிட்டருக்கு 50 காசுகள் உயர்வு நள்ளிரவு முதல் அமலானது... பெட்ரோல் விலையில் மாற்றமில்லை
மும்பை : டீசல் விலை லிட்டருக்கு 50 காசுகள் உயர்த்தப்படுகிறது. இந்த விலை ஏற்றம் நள்ளிரவு முதல் அமலானது ஆனால், பெட்ரோல் விலையில் எந்த மாற்றமும் இல்லை.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
இதனையடுத்து பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், டீசல் விலை லிட்டருக்கு 50 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது.
அதன்படி, வரிகளைப் பொருத்து சென்னையில் டீசல் விலை லிட்டருக்கு ரூ.46.08 என்பதிலிருந்து 50 காசுகள் அதிகரித்து ரூ.46.58ஆக விற்கப்படும் என இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த விலை உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
எனினும், பெட்ரோல் விலையில் எந்த மாற்றமும் இல்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
Comments
English summary
Diesel price was on Wednesday hiked by 50 paise per litre but there will be no change in petrol rates. Diesel will cost Rs 44.95 per litre with effect from midnight tonight as against Rs 44.45 currently
Story first published: Thursday, October 1, 2015, 2:32 [IST]