எங்கள மட்டும் சொன்னீங்களே... நீங்க மட்டும் ஒழுங்கா?: திக்விஜய் சிங்குக்கு மச்சினி 'நச்' கேள்வி!
போபால்: 'இந்த வயசில் சும்மா இருக்காமல் இதென்ன வேலை' என்கிற ரீதியில் திக்விஜய்சிங்கின் தம்பி மனைவி டுவிட்டரில் காய்ச்சி எடுத்துள்ளார்.
மச்சினி கடுப்பு
பெண் பத்திரிகையாளர் அம்ரிதா ராயை திருமணம் செய்ய உள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய்சிங் அறிவித்துள்ளதற்கு அவரது மகன் வேண்டுமானால் மறுப்பு சொல்லாமல் இருக்கலாம். ஆனால் மச்சினி கடும் கோபத்திலுள்ளார்.
எனக்கு மட்டும் ஒரு நியாயமா?
திக்விஜய்சிங்கின் தம்பி லட்சுமண் சிங். இவரது மனைவி ருபினா சர்மா சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் "தனது தம்பியைவிட நான் 30 வயது இளையவள் என்பதால் எங்கள் திருமணத்தை எதிர்த்தவர்தான் திக்விஜய்சிங். நான் ராஜபுத்திர வம்சத்தை சேர்ந்தவள் இ்லலை என்பதையும் அவர் எதிர்ப்புக்கு காரணமாக சொன்னார். ஆனால் இப்போது அவரது செயல் விந்தையாக உள்ளது' என்று தெரிவித்துள்ளார்.
நாங்களும் அப்படித்தான்
இதுகுறித்து ருபினா சர்மா சிங்கிடம் நிருபர்கள் கேட்டதற்கு, லட்சுமண் சிங்கின் முதல் மனைவி ஜக்ரிதி இறந்ததும் 2002ல் நான் லட்சுமண் சிங்கை திருமணம் செய்தேன். அப்போது இதே திக்விஜய் சிங்தான், 30 வயது குறைந்த பெண்ணை திருமணம் செய்ய கூடாது என்றும், நான் ராஜபுத்திர வம்சத்தை சேர்ந்தவள் இல்லை என்றும் கூறினார்.
மகளைவிட வயசு குறைவு
லட்சுமண் சிங் முதல் மனைவிக்கு பிறந்த மகள் என்னைவிட 13 வயது இளையவர். ஆனால் எங்கள் திருமணத்துக்கு அவர் கூட எதிர்ப்பு தெரிவித்தார். திக்விஜய் சிங் திருமணம் செய்யப்போகும் பெண்ணுக்கோ, அவரின் மகள்களைவிட வயது குறைவு என்றார்.