திக்விஜய் சிங் திருமணத்திற்கு பத்திரிக்கை அடிச்சாச்சு: தேதி மட்டும் ரகசியம்
போபால்: காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங், பத்திரிக்கையாளரான அம்ரிதா ராய் திருமண தேதி ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் மத்திய பிரதேச முதல்வரும், காங்கிரஸ் பொதுச் செயலாளருமான திக் விஜய் சிங் ராஜ குடும்பத்தைச் சேர்ந்தவர். புற்றுநோயால் அவதிப்பட்ட அவரது மனைவி ஆஷா சிங் கடந்த ஆண்டு மரணம் அடைந்தார். அவர்களுக்கு 4 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.
இந்நிலையில் 67 வயதாகும் திக்விஜய் சிங்கிற்கும் திருமணமாகி கணவரை விவாகரத்து செய்யும் பத்திரிக்கையாளரான அம்ரிதா ராய்க்கும் இடையேயான உறவு வெளிச்சத்திற்கு வந்தது. மேலும் அவர்கள் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும் இணையதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
லோக்சபா தேர்தல் முடிந்த பிறகு அம்ரிதாவை மணக்க திக்விஜய் சிங் திட்டமிட்டுள்ளார். திருமண தேதி குறித்து பத்திரிக்கையும் அடித்தாகிவிட்டது என்று கூறப்படுகிறது. ஆனால் திருமண தேதியை மட்டும் யாருக்கும் தெரிவிக்காமல் ரகசியமாக வைத்துள்ளார்களாம்.
அம்ரிதாவை பிரிந்து வாழும் அவரது கணவரும் அவரின் இந்த புதிய உறவு குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.