மனைவியை துரத்திவிட்ட மோடிக்கு ஓட்டு போடாதீங்க: திக்விஜய்சிங்
டெல்லி: கட்டிய மனைவியையே கைவிட்ட நரேந்திர மோடியை நம்பி மக்கள் ஓட்டு போட முடியுமா என்று காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய்சிங் ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.
வதோதராவில் வேட்புமனுத் தாக்கல் செய்த மோடி, தாம் திருமணம் செய்து கொண்டதை ஒப்புக் கொண்டதும் போதும்.. ட்விட்டர், ஃபேஸ்புக்கில் அதுதான் இப்போது ஹை லைட்டாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
காங்கிரஸ் மூத்த தலைவரான திக்விஜய்சிங் தமது ட்விட்டர் பக்கத்தில், ஒரு பெண்ணை உளவு பார்த்த மோடி, இப்போதுதனக்கு திருமணமானதை ஒப்புக் கொண்டுவிட்டார். மனைவியையே கைவிட்ட மோடி மீது எப்படி இந்த நாட்டு பெண்களுக்கு நம்பிக்கை வரும்?.
இந்த திக்விஜய்சிங்தான் கடந்த சில ஆண்டுகளாக மோடியின் மனைவி பற்றி அதிகம் பேசியவர். மோடி எங்கே உங்கள் மனைவி? உண்மையைச் சொல்லுங்கள் என்று விமர்சித்துக் கொண்டே இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அர்னாப் கோஸ்வாமிக்கு தைரியம் இருக்கா?
அதேபோல் ரொம்ப அலட்டிக் கொள்ளும் டைம்ஸ் நவ் தொலைக்காட்சியின் அர்னாப் கோஸ்வாமியையும் இந்த மோடி விவகாரத்தில் இழுத்துவிட்டிருக்கிறார்கள் ட்விட்டர் திருவாளர்கள். "அர்னாப் கோஸ்வாமிக்கு தைரியம் இருந்தால் உண்மையை உலகறியச் செய்யப்பட்டும்.. இந்த தேசம் உண்மையை அறிந்து கொள்ள விரும்புகிறது" என்று அர்னாப் பாணியிலேயே கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள்...