ஆட்சி கவிழும், தினகரன் முதல்வராவார்: சுப்பிரமணிய சாமி ஆரூடம்
அதிமுக எம்.எல்.ஏக்களின் கூட்டம் குறித்து கருத்து தெரிவித்திருந்த பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி, விரைவில் தினகரன் முதல்வராகி விடுவார் என கூறியுள்ளார்.
டெல்லி: விரைவில் தமிழக அரசு கவிழும் என்றும் அதன் பின் தினகரன் முதல்வராகி விடுவார் என்ற பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமியின் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழக அரசியல் நிலவரங்களை உன்னிப்பாக கவனித்து தன்னுடைய கருத்துகளை பதிவு செய்வதில் சுப்பிரமணிய சாமிக்கு நிகர் அவர் தான். ஆனால் அந்த கருத்தை யாரும் மதிக்க மாட்டார்கள் என்பது வேறு விஷயம். இருந்தாலும் தன்னுடைய கருத்தை அவர் தொடர்ந்து பதிவிட்டுக்கொண்டே தான் இருப்பார். இந்நிலையில் நேற்று நடைபெற்ற அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் குறித்து கருத்து தெரிவித்த சாமி, விரைவில் ஆட்சி கவிழ்ந்து விடும் என்று குறிப்பிட்டுள்ளார்.
அதிமுக எம்.எல்.ஏக்களின் கூட்டத்தில் பேசப்பட்ட விஷயங்களைப் பார்த்தால் அப்படி தான் உள்ளது. விரைவில் இந்த ஆட்சி கவிழ்ந்து விடும், தினகரன் முதல்வராகி விடுவார், அதனால் அதிமுகவை விரைவில் இணைக்கப்பாருங்கள் என்று சுப்பிரமணிய சாமி டுவிட் செய்திருந்தார்.
Judging by outcome of ADMK legislature party meeting today the fall of Palanisamy Govt seems imminent. TTVD May become CM. Better unite soon
— Subramanian Swamy (@Swamy39) January 3, 2018
சுப்பிரமணிய சாமியின் இந்த டுவிட் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. விரைவில் ஆட்சி கவிழும் என தினகரனும் கூறி வந்த நிலையில், சுப்பிரமணிய சாமியின் இந்த டுவிட்டில் அர்த்தம் உள்ளதாக கருதப்படுகிறது. ஆரம்பத்திலிருந்தே தினகரனுக்கு ஆதரவாக பேசி வரும் சுப்பிரமணிய சாமி, ராமன் வாலிக்கு உதவாமல் ஏன் சுக்ரீவனுக்கு உதவினான் என ராமாயணத்தை படித்து பாருங்கள் தெரியும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.