தகுதி நீக்க எம்எல்ஏக்கள் வழக்கில் நாளை உச்சநீதிமன்றம் தீர்ப்பு.. அடுத்து என்ன? கர்நாடகாவில் பரபரப்பு
Recommended Video
டெல்லி: கர்நாடகாவில் தகுதி நீக்கத்திற்கு உள்ளான 17 எம்எல்ஏக்கள் தொடர்பான வழக்கில் நாளை தீர்ப்பு வெளியாக உள்ளது.
கர்நாடகாவில் குமாரசாமி தலைமையில் நடைபெற்று வந்த காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளின் கூட்டணி ஆட்சி கவிழும் வகையில், 17 எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர். கூட்டணியைச் சேர்ந்த இரு கட்சிகளைச் சேர்ந்த எம்எல்ஏக்களும் இதில் அடக்கம்.
இதையடுத்து பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் குமாரசாமி அரசு கலைந்தது. எனவே, 17 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார் சபாநாயகர் ரமேஷ் குமார்.
கேரளா லாபி சொன்னபடி செய்த சோனியா.. சிவசேனாவிற்கு நோ சப்போர்ட்.. காங்கிரசின் அதிரடி கேம்!
இடைத் தேர்தல்
இதை எதிர்த்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தனர். நீதிபதி ரமணா தலைமையிலான அமர்வு முன்னிலையில் நடைபெற்று வந்த இந்த விசாரணை முடிவடைந்து, கடந்த அக்டோபர் 25-ஆம் தேதி, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம். இந்த நிலையில் காலியாக உள்ள 17ல், 15 தொகுதிகளுக்கு வரும் டிசம்பர் 5ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அனுமதி கோரினர்
தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் சார்பில், முன்னதாக, கர்நாடகாவில் நடைபெற உள்ள 15 சட்டசபை தொகுதிகளுக்கு நடைபெற உள்ள இடைத்தேர்தல்களில் போட்டியிட அனுமதிக்குமாறு நீதிமன்றத்தில் கோரிக்கைவிடுத்தனர். எம்.எல்.ஏ.க்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, தகுதி நீக்கம் செய்யப்பட்டது உள்நோக்கத்துடன்தான், தன்னிச்சையானது என்று வாதிட்டார். எம்.எல்.ஏ.க்களுக்காக மூத்த வழக்கறிஞர்களான ஆர்யாம சுந்தரம், ஏ.கே.கங்குலி, கே.வி.விஸ்வநாதன், சஜன் பூவையா, வி கிரி ஆகியோரும் ஆஜரானார்கள்.
வாதங்கள்
சபாநாயகர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், இந்த விவகாரத்தை அரசியலமைப்பு பெஞ்ச் விசாரிக்க வேண்டும் என்று வாதிட்டார். இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை அணுக மனுதாரர்களுக்கு உரிமை இல்லை என்றும் வாதிடப்பட்டது. மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவனும் சபாநாயகர் தரப்பில் வாதங்களை முன்வைத்தார்.
ஒத்திவைப்பு
இதனிடையே இடைத் தேர்தலுக்காக, நவம்பர் 11 ஆம் தேதியில் இருந்து 18ம் தேதிக்குள் வேட்புமனு தாக்கல் செய்யப்பட வேண்டியுள்ளது. ஆனால், தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் தீர்ப்பு வெளியாகாத நிலையில், அவர்களால் இந்த இடைத் தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் நிலவியது. எனவே தேர்தலை ஒத்திவைக்க 17 பேரும் உச்சநீதிமன்றத்தை நேற்று அணுகியிருந்தனர்.
எடியூரப்பா நிலை
இந்த நிலையில், நாளை, தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. ஒருவேளை இவர்களை தகுதி நீக்கம் செய்தது செல்லும் என்றால் 17 பேரின் அரசியல் எதிர்காலம் அவ்வளவுதான். ஆனால் தகுதி நீக்கம் செல்லாது என்று தீர்ப்பு வந்தால் அவர்கள் இடைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட திட்டமிட்டுள்ளனர். இதற்கு பாஜக நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவிக்க வாய்ப்பு உள்ளதால், எடியூரப்பாவுக்குதான் சிக்கல்.