மக்களே.. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை நம்பாதீங்க.. வெங்கையா நாயுடு அறிவுரை
Recommended Video
குண்டூர்: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை மக்கள் நம்ப வேண்டாம் என துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு அறிவுறுத்தி உள்ளார்.
நேற்று மாலை 6.30 மணிக்கு மேல் இந்தியாவின் முன்னணி தேசிய ஊடகங்கள் மற்றும் மாநில ஊடகங்கள் பல தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தின.இந்த கணிப்புகளில் பாஜக கூட்டணியே அதிக இடங்களில் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் குண்டூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு பேசினார். அப்போது அவர் கூறுகையில், எனது பங்களிப்பு இல்லாமல் இந்த தேர்தல் நடந்து முடிந்துவிட்டது.
குடியரசுத் தலைவர் ஆவதற்கு முன்பு நான் 16 இடங்களில் தேர்தல் கூட்டங்களில் பேசுவேன். இப்போது நான் மதிக்கத்தக்க பதவியில் இருப்பதால் தேர்தல் பிரச்சாரங்களில் இருந்து விலகிவிட்டேன்.
இப்போது தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகி உள்ளன. ஆனால் இந்த எக்சிட் போலை நம்பாமல், எக்ஸாட் போலை நம்புங்கள், அதாவது நிஜ தேர்தல் முடிவுகளை நம்புங்கள். தேர்தல்களில் சாதி , மதம் பார்த்து சீட் கொடுப்பது கவலையளிக்கிறது. அவர்கள் தேர்தலில் வெற்றிபெறுவதற்காக கோடிக்கணக்கில் செலவு செய்வது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்குகிறார்கள்" இவ்வாறு கூறினார்.