For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

செய்வீர்களா? மக்களே செய்வீர்களா?: கேட்பது சச்சின் டெண்டுல்கர்

By Siva
Google Oneindia Tamil News

மும்பை: குழந்தைகளை பணியமர்த்த வேண்டாம் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

குழந்தைகளை பணியமர்த்த வேண்டாம் என அரசு மக்களை கேட்டுக் கொண்டு தான் உள்ளது. ஆனால் அரசாங்கம் பாட்டுக்கு கூறட்டும் என்று மக்கள் குழந்தைகளை வேலைக்கு வைக்கிறார்கள்.

Don't employ kids, let them chase dreams: Sachin Tendulkar

டீக்கடைகள், கட்டுமானப் பணி நடக்கும் இடங்கள், ஹோட்டல்களில் சிறுவர்கள் வேலை செய்வதை இன்றும் பார்க்க முடிகிறது. மேலும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்போர் தங்களின் குழந்தைகளை பார்த்துக் கொள்ள சிறுமிகளை வேலைக்கு வைக்கிறார்கள்.

பண வசதி இல்லாததால் அந்த சிறுமிகளும் தங்களின் ஆசைகள், கனவுகளை புதைத்துவிட்டு பணக்கார வீட்டுக் குழந்தைகளுக்கு ஆயா வேலை பார்க்கிறார்கள்.

இந்நிலையில் குழந்தை தொழிலாளர்கள் பற்றி முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

கனவு காண ஒவ்வொரு குழந்தைக்கும் உரிமை உள்ளது. அவர்கள் கனவை துரத்தட்டும். சிறுவர்களை வேலைக்கு வைக்காதீர்கள் என்று தெரிவித்துள்ளார்.

English summary
Former cricketer Sachin Tendulkar tweeted that, 'EVERY CHILD DESERVES TO CHASE DREAMS. LET DREAMS BE CHASED. #DONT_EMPLOY_LITTLE_ONES'
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X