For Quick Alerts
For Daily Alerts
Just In
இரட்டை இலை சின்னம் வழக்கு: விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தது டெல்லி ஹைகோர்ட்
இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தது.
டெல்லி: இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தது.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஓபிஎஸ் தரப்பும் சசிகலா தரப்பும் அதிமுகவின் இரட்டை இலைச் சின்னத்திற்கு போட்டிபோட்டது.
இதைத்தொடர்ந்து இரட்டை இலைச் சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது. இரட்டை இலைச்சின்னத்துக்கு உரிமை கோரி சசிகலா தரப்பும் ஓபிஎஸ் தரப்பு மாறி மாறி பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்தன.
இந்நிலையில் தேர்தல் ஆணையம் இரட்டை இலைச்சின்னத்தை ஓபிஎஸ் தரப்புக்கு ஒதுக்கியது. தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து சசிகலா, டிடிவி தினகரன் தரப்பினர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை டெல்லி உயர் நீதிமன்றத்தில் இன்று தொடங்கியது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட டெல்லி உயர்நீதிமன்றம் வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தது.
Comments
double leaf symbol case delhi high court investigation admk இரட்டை இலை வழக்கு டெல்லி உயர்நீதிமன்றம் விசாரணை அதிமுக
English summary
In the case of the double leaf symbol, the Delhi High Court has started investigating. Election commission has allocated the double leaf symbol to OPS team. Delhi high court post poned trial for tomorrow