For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஓவர் போதை... நடுரோட்டில் படுத்துத் தூங்கிய போலீஸ்காரர்.. பேருந்து ஏறியதால் பலி!

போதையில் சாலையில் படுத்திருந்த போலீஸ்காரர் விபத்தில் பலியானார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    போதையில் நடுரோட்டில் தூங்கிய போலீஸ்... பேருந்து ஏறியதால் உயிரிழப்பு

    அகமதாபாத்: மதுபோதையில் சாலையில் படுத்திருந்த போலீஸ்காரர் மீது பேருந்து ஏறியதில், சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    அகமதாபாத்தின் நரோடா பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ் பார்மர் (45). போலீஸ்காரரான இவர் தீபாவளிக்கு முந்தைய தினம் இரவு மது குடித்துள்ளார். அதிக போதையால் சாலையிலேயே படுத்து தூங்கி விட்டார்.

    DRUNK COP LIES ON ROAD UNCONSCIOUS, BUS RUNS HIM OVER

    தீபாவளியன்று அதிகாலை சுமார் ஒரு மணியளவில் அவ்வழியே வந்த பேருந்து எதிர்பாராத விதமாக அவர் மீது ஏறியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பேருந்து ஓட்டுனரைக் கைது செய்தனர். 'இருளில் தினேஷ் சாலையில் படுத்திருந்தது தெரியவில்லை' என விபத்திற்கான காரணம் குறித்து ஓட்டுநர் போலீசில் தெரிவித்துள்ளார்.

    தீபாவளியன்று நடந்த இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    English summary
    A 45-year-old constable from Ahmedabad was run over by a bus in the early hours of Tuesday. The accident reportedly took place in Naroda, Ahmedabad.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X