For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குடிபோதையில் மனைவியுடன் தகராறு... 3 மாத குழந்தையை தரையில் அடித்துக்கொன்ற கொடூரன்

மனைவியுடன் நடந்த தகராறில் 3 மாத பச்சிளம் குழந்தையை கொடூரமாக அடித்துக்கொன்று கை கால்களை நசுக்கி பிய்த்து தரையில் அடித்து கொன்றுள்ளான், அவனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Google Oneindia Tamil News

கொல்கத்தா: கணவன் மனைவி தகராறில் பச்சிளம் பிள்ளை என்ன செய்யும். குடிபோதையில் மனைவியுடன் சண்டை போட்ட ஒருவன், குரங்கு கையில் பூமாலையாக 3 மாத பச்சிளம் பிஞ்சு குழந்தையை தடையில் அடித்து பிய்த்து எரிந்து கொலை செய்திருக்கிறான்.

அந்த கொடூர நபரின் பெயர் ராஜூ என்பதாகும். இன்று காலையிலேயே போதையில் வந்த அவன் மனைவி அப்சாரியை வம்புக்கு இழுத்தான். மனைவியும் சூடாக பதிலுக்கு பதில் பேசினாள். போதையில் இருந்த அவனை மேலும் உசுப்பேற்றியது. என்ன செய்வது என்று தெரியாமல் பாத்திரங்களை தள்ளி விட்டான். மனைவியை திட்டினான்.

Drunk father slams infant daughter on ground twists limbs to kill her

கணவன் மனைவி சண்டை பலமாக நடந்து கொண்டிருந்த போதும் எதுவும் தெரியாமல் அவர்களின் மூன்று மாத குழந்தை படுக்கையில் கை கால்களை அசைத்து விளையாடிக்கொண்டிருந்தாள். அதைப் பார்த்த ராஜூ பயங்க கோபத்தோடு குழந்தையின் கால்களை பிடித்து தூக்கினான்.

 பாப்பா சாக்லேட் தறேன்... 4 வயது சிறுமியிடம் அசிங்கம் செய்த போலீஸ் கான்ஸ்டபிள் பாப்பா சாக்லேட் தறேன்... 4 வயது சிறுமியிடம் அசிங்கம் செய்த போலீஸ் கான்ஸ்டபிள்

என்ன நடக்கிறது என்பதை அப்சாரி உணரும் முன்னே அந்த குழந்தையை கீழே வீசினான் இதில் அந்த பச்சிளம் குழந்தை பரிதாபமாக துடி துடித்து அடங்கியது. பதறிப்போன அப்சாரி உடனடியாக குழந்தையை எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடினாள். கூடவே மாமியாரும் அலறியடித்துக்கொண்டு ஓடினர். ஆனால் குழந்தை இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

நடந்த சம்பவத்தை பக்கத்து வீட்டுக்காரர்கள் போலீசில் கூறவே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

பெண் குழந்தை பிறந்ததில் இருந்த ராஜூவிற்கு சந்தோசமில்லை. மனைவியுடன் சண்டை போட்டுக்கொண்டே இருப்பானாம். இன்றும் அப்படித்தான் சண்டை அதிகமாகவே குழந்தையை கீழே வீசி கொன்று விட்டான்.

என்னதான் பெண் குழந்தையாக இருந்தாலும் அதை கொடூரமாக கொல்வதற்கு எப்படித்தான் மனது வந்தாதோ. வழக்குப் பதிவு செய்த போலீசார் ராஜூவை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

English summary
Police have arrested a man named Raju for allegedly killing his three-month-old daughter in an inebriated state in Kolkata's Uriapara area. The man allegedly slammed his daughter on to the ground, leading to her death, on Thursday morning.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X