For Daily Alerts
Just In
டேராடூனில் ஃபுல் மப்பில் உதவிக்கு வந்த போலீசுக்கு 'பளார்' 'பளார்' விட்ட கல்லூரி மாணவி
டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் நகர் தர்ஷன் லால் சவுக் அருகே ஒரு இளம் பெண் போதையில் போலீசாரை தாக்கிய சம்பாம் பரபரப்பை கிளப்பியுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் நகரின் தர்ஷன் லால் சவுக் அருகே ஒரு இளம் பெண் போதையில் தள்ளாடியபடி நடந்து வந்தார். அப்போது அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த பொதுமக்கள் மற்றும் போலீஸ் அந்த பெண்ணுக்கு உதவி செய்ய முயன்றனர்.
ஆனால் கட்டுப்பாட்டில் இல்லாத அந்த பெண் நடு ரோட்டில் உதவிக்கு வந்த போலீசாரையும் பொது மக்களையும் தாக்க தொடங்கினார்.
இதையடுத்து அந்த பெண் காவல்நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் கல்லூரி மாணவி என தெரியவந்தது.
அந்த மாணவியின் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசாருக்கு பெற்றோர்களை தொடர்பு கொண்டு தகவல் கொடுத்துள்ளனர்.
Comments
English summary
Dehradun police had a tough time when a girl caused a ruckus in an inebriated condition on Darshanlal Chowk in the city.
Story first published: Tuesday, September 15, 2015, 16:00 [IST]