அட தேவுடா.. வீடு வரைக்கும் தாங்காது.. இந்த குடிகாரர் செய்த சேட்டையை பாருங்களேன்!
கோழியை இளைஞர் ஒருவர் உயிருடன் சாப்பிட்டுள்ளார்.
தெலங்கானா: எங்காவது இந்த கன்றாவி நடக்குமா? குடிக்கிறதே தப்பு.. அதையும் ஒரு அளவோடு குடிச்சா என்னவாம்? போதை கண்ணு மறைக்கும்ன்னு சொல்லுவாங்களே.. அது இந்த சம்பவம்தான்போல.
தெலங்கானா மாநிலத்தில் உள்ள மாவட்டம் மகபூபாத். இங்கு கேசமுத்ரம் என்ற கிராமம் உள்ளது. இங்கு கிராமத்தை சேர்ந்த இரண்டு பேர் கடைக்கு போய் கோழி வாங்கினர். அப்போது ரெண்டு பேருமே செம போதையில் இருந்துள்ளனர். கோழியை வீட்டுக்கு கொண்டு போய் சைட்-டிஷ்ஷாக சமைத்து சாப்பிடலாம் என்று நினைத்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்தனர்.
வரும் வழியில் இரண்டு பேர்ல ஒருத்தருக்கு பயங்கரமா பசி எடுத்துச்சாம். வீட்டுக்கு போய் கோழியை சுத்தம் செய்து சாப்பிடும் அளவுக்கு அவருக்கு பொறுமை இல்லையாம். 'அதுக்கெல்லாம் லேட் ஆகும், அதுவரைக்கும் பசி தாங்காதுடா சாமி' என்று யோசித்த அவர், நடுவழியிலேயே கோழியின் இறக்கையை பிய்க்க தொடங்கினார்.
ஒவ்வொரு இறக்கையாக அவசர அவசரமாக பிடுங்கி போட்டார். பிறகு கோழியை அப்படியே கடித்து சாப்பிட ஆரம்பித்துவிட்டார். நடுநடுவே விக்கல் வரும்போது கோழியின் ரத்தத்தையும் அவர் அப்படியே குடித்துள்ளார். இறக்கையை உறித்து கோழியை அப்படியே சாப்பிடுவதிலிருந்து கூட வந்த மற்றொருவர் அதை வீடியோ எடுத்திருக்கிறார். இதனை சமூகவலைதளங்களில் வெளியிட்டும் இருக்கிறார்.
என்னதான் தண்ணி அடிச்சாலும் அதுக்குன்னு இப்படியா? மதுவின் கொடூரம் இப்படியே போனால் இன்னும் கொஞ்ச நாளில் கோழி போய்... நரமாமிசம் சாப்பிடற நிலைமை வந்துடும்போல இருக்கு! அட தேவுடா!