தூங்கி கொண்டிருந்த அண்ணி.. கத்தியை எடுத்து மூக்கை அறுத்த குடிகார மச்சினன்!
அண்ணியின் மூக்கை குடிகார நபர் ஒருவர் அறுத்துள்ளார்
மொரதாபாத்: குடியிலும் குடி பெரும் குடியாக இருக்கிறது இந்த நபரின் செயல். அளவுக்கு அதிகமாக குடித்து போதை மண்டைக்கேறியதில் ஒரு நபர் தனது அண்ணியின் மூக்கை கத்தியால் அறுத்து விட்டார்.
குடி போதை மண்டைக்கேறி விட்டால் என்ன செய்கிறோம் என்பதே இந்த குடிகாரர்களுக்குத் தெரியாமல் போய் விடுகிறது. பாலியல் பலாத்காரம், கொலை என்று அத்தனை வகையான குற்றச்செயல்களிலும் இந்த குடிகாரர்களின் பின்னணி இல்லாமல் இல்லை.
இப்படித்தான் உத்தரப் பிரதேச மாநிலம் மொரதாபாத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அந்த ஊரைச் சேர்ந்த குடிகார நபர் ஒருவர் அதிக அளவில் மது அருந்தியுள்ளார். இதில் போதை மண்டைக்கேறி விட்டது. அதுவும் எப்போது காலை 6 மணிக்கே குடித்து விட்டார்.
குடித்தவர் நேராக வீட்டுக்குள் நுழைந்தார்.. ரூமில் தூங்கிக் கொண்டிருந்த தனது அண்ணியிடம் போய், கத்தியை எடுத்து அவரது மூக்கை நறுக்கி விட்டார். வலியால் துடித்த அண்ணியை குடும்பத்தினர் ஆஸ்பத்திரிக்கு கூட்டிச் சென்றனர். ஆனால், அவரது மூக்கு முழுமையாக அறுபடவில்லை. இதனால் அவர் தப்பி விட்டார். இப்போதும் அண்ணிக்கு சிகிச்சை நடந்து வருகிறது.
லீலாவை காதலித்தேன்.. இந்திராவை கட்டி வைத்தனர்.. கொன்றேன், எரித்தேன்.. கம்பி எண்ணும் ரிடையர்ட் எச்எம்
இதுகுறித்து மஜோலா போலீஸ் ஸ்டேஷனில் மூக்கு அறுந்த பெண், புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து மூக்கை அறுத்த மச்சினனை கைது செய்துள்ளனர். அவர் ஏன் மூக்கை அறுத்தார் என்று இதுவரை தெரியவில்லையாம்.