ஐபிஎல் சாம்பியன்: தோனிக்கு நேரில் வாழ்த்து தெரிவித்த துரைமுருகன்
ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்ற சென்னை கேப்டன் தோனிக்கு துரைமுருகன் நேரில் வாழ்த்து தெரிவித்தார்.
Recommended Video
மும்பை: 11-வது ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியை திமுக முதன்மை செயலர் துரைமுருகன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
ஐபிஎல் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரூ20 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது. 2-வது இடம் பெற்ற ஐதராபாத் அணிக்கு ரூ12.5 கோடி பரிசுத் தொகை அளிக்கப்பட்டது.
சாம்பியன் பட்டம் வென்ற மகிழ்ச்சியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் கொண்டாடி வருகிறது. கோப்பையை வைத்து வழிபாடுகள், பூஜைகளும் நடத்தப்பட்டன.
ஐபிஎல் சாம்பியன்: தோனிக்கு நேரில் வாழ்த்து தெரிவித்த துரைமுருகன் https://t.co/cWl8SWPdcn #Dhoni #CSKvSRH #IPL2018Final pic.twitter.com/hjbUm6tR4E
— Oneindia Tamil (@thatsTamil) May 29, 2018
இந்த நிலையில் சென்னை கேப்டன் தோனியை திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார். அப்போது தமது கையெழுத்துடன் கூடிய சிஎஸ்கே டி சர்ட்டை துரைமுருகனுக்கு தோனி பரிசளித்தார்.