For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அருணாசலப் பிரதேசத்தில் நில நடுக்கம்.. மக்கள் பீதி!

அருணாசலப்பிரதேசத்தில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் வீடுகள் அதிர்ந்ததால் மக்கள் பீதியடைந்தனர்.

Google Oneindia Tamil News

சியாங்: அருணாசலப் பிரதேச மாநிலம் சியாங் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் வீடுகள் அதிர்ந்ததால் மக்கள் பீதியடைந்தனர்.

அருணாசலப் பிரதேசம் மாநிலத்தில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 3.8ஆகப் பதிவான இந்த நிலநடுக்கத்தால் வீடுகள் அதிர்ந்தன.

Earth quake in Arunachal Pradesh : Measures 3.8 magnitude!

வீட்டில் இருந்தப் பொருட்கள் உருண்டு கீழே விழுந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.

இந்த நிலநடுக்கத்தால் பொருள் சேதம் மற்றும் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இம்மாத தொடக்கத்தில் உத்தரகாண்ட் மற்றும் இந்தியா - நேபாள எல்லையில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதற்கு முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் 5.4 ரிக்டர் அளவில் அஸ்ஸாம், மேகாலயா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

English summary
Earth quake hits siang in Arunachal Pradesh. Earth quake measuring 3.8 on the Richter scale.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X